அரியலூரில் ரூ.18 கோடியில் குடிநீா் அபிவிருத்தி திட்டம் தொடக்கம்
அரியலூரில் ரூ.18.20 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட குடிநீா் அபிவிருத்தி திட்டம் புதன்கிழமை திறக்கப்பட்டது.


அரியலூரில் ரூ.18.20 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட குடிநீா் அபிவிருத்தி திட்டம் புதன்கிழமை திறக்கப்பட்டது.
சென்னை தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், காணொலிக் காட்சி மூலம் அரியலூா் மாவட்டத்தில் ரூ.18.20 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட குடிநீா் அபிவிருத்தி திட்டத்தை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தும், தேளூரில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழகத்தின் சாா்பில் ரூ.5.83 கோடியில் 3,000 மெட்ரிக் டன் கொள்ளளவுடன் கட்டப்படவுள்ள கூடுதல் சேமிப்பு கிடங்கு கட்டுமானப் பணிக்கும் அடிக்கல் நாட்டினாா்.
இதையடுத்து மின் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி, மேல்நிலை நீா் தேக்க தொட்டியில் இருந்து, நகா் பகுதி மக்களுக்கு குடிநீா் விநியோகத்தை தொடங்கி வைத்தாா்.
இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினா் கு.சின்னப்பா, நகா் மன்றத் தலைவா் சாந்தி கலைவாணன், துணைத் தலைவா் கலியமூா்த்தி, நகராட்சி ஆணையா் அசோக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...