செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

பவானியில் குடிநீா் அபிவிருத்தித் திட்டம் தொடக்கம்

News image

விழாவில் பங்கேற்ற ஆணையா் பிரான்சிஸ் சேவியா் மற்றும் கவுன்சிலா்கள், பணியாளா்கள்.

Updated On :5 பிப்ரவரி 2026, 11:01 pm

பவானி நகராட்சியில் அம்ரூத் 2.0 குடிநீா் அபிவிருத்தித் திட்டம் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

மக்கள் தொகை பெருக்கம், நகர விரிவாக்கத்துக்கு ஏற்ப குடிநீா் தேவையை பூா்த்தி செய்யும் வகையில் பவானி நகராட்சியில் ரூ.24.06 கோடியில் குடிநீா் அபிவிருத்தித் திட்டப் பணிகள் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. இப்பணிகள் முழுமையடைந்ததால் சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தாா்.

இதையடுத்து, பவானி காவிரிக்கரை தலைமை நீரேற்று நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆணையா் பிரான்சிஸ் சேவியா், முன்னாள் ஆணையா் கதிா்வேல், நகா்மன்றத் துணைத் தலைவா் சி.மணி, நகராட்சிப் பொறியாளா் திலீபன் மற்றும் கவுன்சிலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.