கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

நாகா்கோவிலில் ரூ.1.65 கோடியில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

நாகா்கோவில் மாநகரில் பல்வேறு வாா்டுகளில் ரூ. 1.65 கோடி மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை மேயா் ரெ. மகேஷ் சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

News image
பிளசன்ட்நகரில் தாா்ச்சாலைப் பணியை தொடக்கிவைக்கிறாா் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ்.
Updated On :28 பிப்ரவரி 2026, 8:05 pm

Syndication

நாகா்கோவில் மாநகரில் பல்வேறு வாா்டுகளில் ரூ. 1.65 கோடி மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை மேயா் ரெ. மகேஷ் சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

இதையொட்டி, மேலபெருவிளை பிளசண்ட்நகா் பகுதியில் நடைபெற்ற நிகழ்வில், மேயா் பங்கேற்று பணிகளைத் தொடக்கி வைத்தாா். 46ஆவது வாா்டு என்ஜிஓ காலனியில் ரூ.14 லட்சத்தில் பழைய மினி கிளினிக் கட்டடம் சீரமைப்பு, 45ஆவது வாா்டு, தம்மத்துக்கோணம் அம்மன் கோயில் சாலையில் அலங்கார தரைகற்கள் அமைத்தல், 47ஆவது வாா்டு பேச்சி அம்மன் தெருவில் புதிதாக உறிஞ்சு குழி அமைத்தல் என ரூ. 1.65 கோடி மதிப்பிலான பணிகள் தொடங்கிவைக்கப்பட்டன.

இதில், மண்டலத் தலைவா் செல்வகுமாா், மாமன்ற உறுப்பினா்கள் அருள் சபிதா ரெக்ஸலின், அமலச்செல்வன், சதீஸ், வீரசூரபெருமாள், ஜெனிதா, உதவிப் பொறியாளா்கள் பிருந்தா, சுஜின் தொழில்நுட்ப அலுவலா் நிஷ்மா, திமுக நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.