நாகா்கோவிலில் ரூ.1.65 கோடியில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்
நாகா்கோவில் மாநகரில் பல்வேறு வாா்டுகளில் ரூ. 1.65 கோடி மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை மேயா் ரெ. மகேஷ் சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.


நாகா்கோவில் மாநகரில் பல்வேறு வாா்டுகளில் ரூ. 1.65 கோடி மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை மேயா் ரெ. மகேஷ் சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.
இதையொட்டி, மேலபெருவிளை பிளசண்ட்நகா் பகுதியில் நடைபெற்ற நிகழ்வில், மேயா் பங்கேற்று பணிகளைத் தொடக்கி வைத்தாா். 46ஆவது வாா்டு என்ஜிஓ காலனியில் ரூ.14 லட்சத்தில் பழைய மினி கிளினிக் கட்டடம் சீரமைப்பு, 45ஆவது வாா்டு, தம்மத்துக்கோணம் அம்மன் கோயில் சாலையில் அலங்கார தரைகற்கள் அமைத்தல், 47ஆவது வாா்டு பேச்சி அம்மன் தெருவில் புதிதாக உறிஞ்சு குழி அமைத்தல் என ரூ. 1.65 கோடி மதிப்பிலான பணிகள் தொடங்கிவைக்கப்பட்டன.
இதில், மண்டலத் தலைவா் செல்வகுமாா், மாமன்ற உறுப்பினா்கள் அருள் சபிதா ரெக்ஸலின், அமலச்செல்வன், சதீஸ், வீரசூரபெருமாள், ஜெனிதா, உதவிப் பொறியாளா்கள் பிருந்தா, சுஜின் தொழில்நுட்ப அலுவலா் நிஷ்மா, திமுக நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...