ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தனுஷ் - 55 படப்பிடிப்பில் இணையும் மம்மூட்டி!

தனுஷ் - 55 படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது பற்றி...

Dhanush, Mammootty, Rajkumar Periyasamy

நடிகர்கள் தனுஷ், மம்மூட்டியுடன் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி - கோப்புப் படம்

Published On :12 மார்ச் 2026, 11:58 am IST

தனுஷ் - 55 திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் பிரபல நடிகர் மம்மூட்டி இணைவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷ் நடிக்கும் 55-வது படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார்.

தனுஷின் சொந்தத் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தில் நடிகர்கள் மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் இணைவது படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் (பிப். 5) பூஜையுடன் தொடங்கியது.

முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்போது சென்னையில் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், இதில் நடிகர் மம்மூட்டி இணைவதாகவும், அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனுஷ் நடித்த படங்களில் இந்தப் படமே அதிக பொருட்செலவில் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்திற்குப் பின்னர் மாரி செல்வராஜ் மற்றும் தமிழரசன் பச்சமுத்து ஆகியோரின் படங்களில் தனுஷ் நடிக்கவுள்ளார்.

Summary

Mammootty joining the second schedule of Dhanush's 55th movie

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.