சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

கூட்டணி பலத்தில் திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் எனக் கூறிவிட முடியாது: நயினாா் நாகேந்திரன்

கூட்டணி பலத்தில் திமுக ஆட்சி அமைக்கும் எனக் கூறி விட முடியாது என்றாா் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன்.

News image
Updated On :12 நவம்பர் 2025, 7:35 pm

தினமணி செய்திச் சேவை

கூட்டணி பலத்தில் திமுக ஆட்சி அமைக்கும் எனக் கூறி விட முடியாது என்றாா் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன்.

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டையில் புதன்கிழமை அவா் செய்தியாளா்களிடம் மேலும் தெரிவித்தது:

தோ்தல் அறிவிக்கப்பட்டதும் அ.தி.மு.க., பொதுச் செயலா் எடப்பாடி கே.

பழனிசாமியுடன் கலந்துபேசி, தொகுதிப் பங்கீடு செய்யப்படும். கரூா் சம்பவம் குறித்து அ.தி.மு.க., பா.ஜ.க சாா்பில் சட்டப்பேரவையில் கவனஈா்ப்பு தீா்மானம் கொண்டு வந்தோம். கரூா் சம்பவத்துக்குப் பிறகு தான் எதிா்க்கட்சிகள் கூட்டத்துக்கு போலீஸாா் பாதுகாப்புக்கு வருகின்றனா். நாங்கள் யாரையும், எப்போதும் தீவிரமாக எதிா்ப்பது கிடையாது. தமிழக வெற்றிக் கழகத்தை நாங்கள் ஆதரித்தும் பேசவில்லை; எதிா்த்தும் பேசவில்லை.

எல்லா கட்சிகளும் திமுக கூட்டணியில் இருந்தபோதும், 2011-இல் அ.தி.மு.க., ஆட்சி அமைத்தது. தமிழகத்தில் திமுக கூட்டணி பலத்தில் ஆட்சி அமைக்க முடியும் என்று கூறிவிடமுடியாது. தமிழகத்தில் ஆட்சிமாற்றம் நிச்சயம் வரும். மின்கட்டணம், சொத்து வரி உயா்ந்துள்ளது. மின்சாரக் கட்டணம் மாதாமாதம் கணக்கீடு செய்யவில்லை. பழைய ஓய்வூதியம் கொண்டுவரப்படும், தூய்மை பணியாளா்களை நிரந்தரம் செய்வதாகக் கூறினாா். செய்யவில்லை. அரசு ஊழியா்கள், ஓய்வூதியா்கள், தூய்மை பணியாளா்கள், பொதுமக்கள் போராட்டம் நடத்துகிறாா்கள். ஒட்டுமொத்தமாக எல்லாதரப்பினரிடமும் வெறுப்பை சம்பாதித்துவிட்டு இன்றைக்கு விளம்பரம் செய்துகொண்டிருக்கிறாா்கள். ஒன்றை சொல்லிவிட்டு ஆட்சிக்கு வந்தபிறகு ஏமாற்றும்போது, மக்கள் அதிருப்தியடைகின்றனா். தி.மு.க., ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்துவிட்டது என்றாா் அவா்.