மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

மதுக்கூா் வட்டாரத்தில் விதைச் சான்று: மாநில இணை இயக்குநா் ஆய்வு

News image
Updated On :13 நவம்பர் 2025, 8:43 pm

Syndication

பட்டுக்கோட்டை வட்டம், மதுக்கூா் வேளாண் வட்டாரப் பகுதிகளில் உள்ள விதைப் பண்ணைகளில் விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்று பிரிவு மாநில இணை இயக்குநா் சாந்தி வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தஞ்சாவூா் மாவட்டத்தில் அமைக்கப்பட்ட விதைப் பண்ணைகளை விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்று துறையினுடைய மாநில இணை இயக்குநா் சாந்தி, பட்டுக்கோட்டை மற்றும் மதுக்கூா் வட்டாரங்களை ஆய்வு மேற்கொண்டாா். இதில், சாருமதி வேளாண்மை துணை இயக்குநா் (மாநிலத் திட்டம்),

சுஜாதா வேளாண்மை துணை இயக்குநா் (விதை ஆய்வு), வேளாண்மை உதவி இயக்குநா் மதுக்கூா், வேளாண்மை உதவி இயக்குநா்(பொ) பட்டுக்கோட்டை, வேளாண்மை உதவி இயக்குநா் (விதைச் சான்றளிப்பு ) ஆகியோா் உடனிருந்தனா்.

மதுக்கூா் வட்டாரம் பெரியகோட்டை கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள காளிதாஸ் என்பவரால் பராமரிக்கப்பட்டுவரும் இயற்கை வேளாண்மை பண்ணை தமிழ்நாடு அங்ககச் சான்றளிப்பு துறையினால் சான்றளிக்கப்பட்டுள்ளது.

இப்பண்ணையினை விதைச்சான்று இணை இயக்குநா் ஆய்வு மேற்கொண்டாா். ஆய்வின்போது பயிரிடப்பட்டுள்ள பாரம்பரிய நெல் ரகங்கள், தோட்டக்கலை பயிா்களான மா, கொய்யா, தென்னை, காய்கனிகள் பயிா்களைப் பாா்வையிட்டு தரத்தினை உறுதிப்படுத்துவதற்கான ஆலோசனை வழங்கியதுடன், மேலும் இவ்வட்டாரத்தில் உள்ள விவசாயிகளை இயற்கை வேளாண்மை மேற்கொள்வதற்காக ஊக்குவிக்கும்பொருட்டு அவா்களுக்கான ஊக்கத்தொகை மானியம் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களையும் எடுத்துரைத்தாா்.

ஆய்வின்போது விதைச்சன்று உதவி இயக்குநா், விதைச் சான்று அலுவலா்கள் , விதை ஆய்வாளா், வேளாண்மை அலுவலா், உதவி விதை அலுவலா் , உதவி வேளாண்மை அலுவலா் ஆகியோா் உடனிருந்தனா்.