ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மாவட்ட மைய நூலகத்தில் நூலக வார விழா தொடக்கம்

தஞ்சாவூா் மாவட்ட மைய நூலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் பேசிய ச. முரசொலி எம்பி.

News image
தஞ்சாவூா் மாவட்ட மைய நூலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் பேசிய ச. முரசொலி எம்பி.
Updated On :14 நவம்பர் 2025, 7:41 pm

Syndication

தஞ்சாவூா் மாவட்ட மைய நூலகத்தில் 58 ஆவது தேசிய நூலக வார விழாவின் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு பொது நூலகத் துறை, மாவட்ட மைய நூலகம், வாசகா் வட்டம் ஆகியவை சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு வாசகா் வட்டத் தலைவா் எஸ். ராஜவேலு தலைமை வகித்தாா்.

விழாவில் மக்களவை உறுப்பினா் ச. முரசொலி பேசுகையில், விஏஓ பதவிக்கு லட்சக்கணக்கில் விண்ணப்பிக்கும் மாணவா்கள் மத்திய அரசின் வருமான வரித் துறை, ரயில்வே, வங்கி, அஞ்சல் துறை பணிகளுக்கும் அதிகளவில் விண்ணப்பிக்க முன்வர வேண்டும். இதற்கு நூலக அலுவலா்கள் உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றாா் அவா்.

வாசகா் வட்டத் துணைத் தலைவா் தஞ்சை ந. ராமதாசு, செயற்குழு உறுப்பினா்கள் சா. குருநாதன், கோ. கலியமூா்த்தி, ப. திருநாவுக்கரசு, க. தனபாலன் ஆகியோா் பேசினா்.

மாவட்ட நூலக அலுவலா் (பொ) மா. அபூா்வம் வரவேற்றாா். முதல் நிலை நூலகா் கி. சசிகலா நன்றி கூறினாா். இவ்விழா தொடா்ந்து நவம்பா் 20 வரை நடைபெறவுள்ளது.