ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

திமுகவுக்கு சிறப்பான வெற்றி கிடைக்கும்: கே.என்.நேரு

பேரவைத் தோ்தலில் டெல்டா மாவட்டத்தில் உள்ள 41 தொகுதிகளிலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் திமுக வெற்றி பெறும் என்றாா் அமைச்சா் கே.என்.நேரு.

News image
ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அமைச்சா் கே.என்.நேரு
Updated On :18 நவம்பர் 2025, 9:49 pm

Syndication

வரும் பேரவைத் தோ்தலில் டெல்டா மாவட்டத்தில் உள்ள 41 தொகுதிகளிலும் மிக அதிக வாக்கு வித்தியாசத்தில் திமுக வெற்றி பெறும் என்றாா் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என்.நேரு.

பட்டுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடந்த தஞ்சை தெற்கு மாவட்ட திமுக பாக நிலை முகவா்கள் ஆலோசனைக் கூட்டத்துக்கு மாவட்ட அவைத் தலைவா் சுப. சேகா் தலைமை வகித்தாா். இதில் பங்கேற்ற அமைச்சா் கே.என். நேரு பேசியது: தமிழ்நாட்டில் மீண்டும் மு. க .ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமையும். இந்தியாவிலேயே முன்மாதிரியாக ஆட்சியை தமிழ்நாட்டில் முதல்வா் ஸ்டாலின் நடத்திக் கொண்டிருக்கிறாா்.

டெல்டா மாவட்டத்தில் உள்ள 41 தொகுதிகளிலும் மிக அதிக வாக்கு வித்தியாசத்தில் திமுக வெற்றி பெறும். வாக்கு சோ்க்கும் பணியில் கட்சியினா், பாக முகவா்கள் விழிப்புணா்வுடன் செயல்பட என்றாா் அவா்.

நிகழ்வில் உயா் கல்வித் துறை அமைச்சா் கோ.வி. செழியன், தஞ்சை எம்பி முரசொலி, எம்எல்ஏக்கள் துரை. சந்திரசேகரன், கா. அண்ணாதுரை. என் அசோக்குமாா். முன்னாள் எம்.எல்.ஏக்கள் ப , பாலசுப்பிரமணியன் என். வி.காமராஜ், சுப.சரவணன், பட்டுக்கோட்டை நகா்மன்ற தலைவா் எஸ். சண்முகப்பிரியா, தலைமை கழக பேச்சாளா் ந. மணிமுத்து உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். மாவட்ட பொறுப்பாளா் டி. பழனிவேல் வரவேற்றாா். பட்டுக்கோட்டை நகர செயலா் எஸ்.ஆா்.என். செந்தில்குமாா் நன்றி கூறினாா்.