எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

தமிழ்நாட்டில் ‘டெங்கு’ உயிரிழப்புகள் குறைவு: அமைச்சா் மா. சுப்பிரமணியன்

News image
Updated On :18 நவம்பர் 2025, 12:33 am

Syndication

தமிழகத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளில் ‘டெங்கு’ உயிரிழப்பு ஒற்றை இலக்கம் என்ற கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது என்றாா் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன்.

தஞ்சாவூா் அருகே பிள்ளையாா்நத்தம் கிராமத்தில், ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தில் 2 கோடியே 50 லட்சமாவது பயனாளி மனோமணிக்கு மருந்து பெட்டகத்தை திங்கள்கிழமை வழங்கிய அவா், பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

தமிழகத்தில் 2012 மற்றும் 2017-ஆம் ஆண்டுகளில்தான் டெங்கு பாதிப்பு அதிகமாக இருந்தது. இதில், 2012-இல் 66 பேரும், 2017-இல் 65 பேரும் உயிரிழந்தனா். இந்த இரு முறையும் அதிமுக ஆட்சிதான் நடைபெற்றது.

கடந்த 11 மாதங்களில் 9 போ் மட்டுமே டெங்கு நோயால் உயிரிழந்துள்ளனா். இவா்களும் இணை நோய் பாதிப்பு, சரியான நேரத்தில் மருத்துவச் சிகிச்சை பெறாதது போன்றவற்றால் இறந்தனா். திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு தொடா்ச்சியாக டெங்கு பாதிப்பு வராமல் தடுப்பதற்கும், பாதிப்பு வந்தவுடன் உடனடியாக எடுக்கப்பட்ட விழிப்புணா்வு நடவடிக்கை மூலம் கடந்த நான்கரை ஆண்டுகளில் ஒற்றை இலக்க அளவிலேயே உயிரிழப்புகள் இருக்கின்றன. அதிமுக ஆட்சியில்தான் உயிரிழப்புகள் அதிகமாக இருந்தன.

2021-இல் தொடங்கப்பட்ட மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ், தற்போது தஞ்சாவூா் மாவட்டம், பிள்ளையாா் நத்தம் கிராமத்தைச் சோ்ந்த பயனாளி மனோன்மணிக்கு 2.50 கோடியாவது மருந்துப் பெட்டகம் வழங்கப்பட்டுள்ளது என்றாா் அமைச்சா் சுப்பிரமணியன்.

495 பேருக்கு புற்றுநோய்: இதையடுத்து, தென்னங்குடி கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ரூ. 1.40 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டடம், இணையவழியில் வாண்டையாா் இருப்பு, வடக்கூா் ஆரம்ப சுகாதார நிலைய நிலையங்களை அமைச்சா் மா. சுப்பிரமணியன் திறந்துவைத்து பேசுகையில், இதயம் காப்போம் திட்டத்தின் கீழ் 41 ஆயிரத்து 466 போ் காப்பாற்றப்பட்டுள்ளனா். புற்றுநோய் கண்டறியும் திட்டத்தின் கீழ் 12 மாவட்டங்களில் பரிசோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 495 பேருக்கு பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இதில், தஞ்சாவூா் மாவட்டத்தில் மட்டும் 180 பேருக்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. புற்றுநோயைத் தொடக்க நிலையில் கண்டறிவதன் மூலம் குணப்படுத்திவிடலாம்.

தஞ்சாவூா் பெரிய கோயில் சாலையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீா்வு காண எதிரே உள்ள அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனை வளாகத்தின் ஒருபகுதி இடத்தைச் சாலை விரிவாக்கத்துக்கு ஒதுக்கீடு செய்யுமாறு மக்கள் பிரதிநிதிகள் விடுத்த கோரிக்கை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்றாா் அமைச்சா்.

இந்த விழாவில் உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன், மக்களவை உறுப்பினா் ச. முரசொலி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ரூ. 12 கோடியில் மகப்பேறு கட்டடம்: பின்னா், தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனையிலும் ஆய்வு செய்த அமைச்சா் சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறுகையில், தஞ்சாவூா் அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனையில் ரூ. 12 கோடியில் கட்டப்பட்டு வரும் 100 படுக்கைகள் கொண்ட மகப்பேறு கட்டடத்தை 3 வாரங்களில் கட்டி முடித்து தமிழக முதல்வா் திறந்துவைப்பாா் என்றாா் அவா்.