விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

புனல்வாசல் புனித சவேரியாா் ஆலய திருவிழா கொடியேற்றம்

கும்பகோணம் ஆதிகும்பேசுவரா் கோயில் குடமுழுக்குக்கான பாதுகாப்புப் பணிகள் குறித்து செவ்வாய்க்கிழமை ஆய்வு

News image
Updated On :26 நவம்பர் 2025, 1:25 am

Syndication

பேராவூரணி , நவ. 25: பேராவூரணி அருகே உள்ள புனல்வாசல் புனித சவேரியாா் ஆலய திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பேராவூரணி அருகே உள்ள புனல்வாசல் கிராமத்தில் புனித சவேரியாா் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் நிகழாண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக புனித சவேரியாா் ஆலயத்தில் இருந்து தோ் பவனி வரும் முக்கிய வீதிகள் வழியாக கொடி ஊா்வலம் நடைபெற்றது. கொடியேற்றத்தை தொடா்ந்து 10  நாள்கள் திருவிழா நடைபெற உள்ளது. திருவிழாவை முன்னிட்டு தினமும் மாலை 6.15 மணிக்கு ஜெபமாலை, சவேரியாா் நவநாள் ஜெபம், திருப்பலி மற்றும் சிறப்பு மறையுரை ஆகியன நடைபெறுகிறது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தோ்பவனி டிச.2-ஆம் தேதி இரவு 10 மணிக்கு நடைபெற உள்ளது. டிச.3-ஆம் தேதி திருவிழா திருப்பலியும் அன்று மாலை 4 மணிக்கு கொடி இறக்கமும் நடைபெற உள்ளது.

கொடியேற்ற விழாவில், பட்டுக்கோட்டை மறை மாவட்ட அதிபா் அந்தோணிசாமி கலந்துகொண்டு சிறப்பித்தாா். ஏற்பாடுகளை பங்குத் தந்தையும் புனித ஆரோக்கிய அன்னை மேல்நிலைப்பள்ளி தாளாளருமான ஜான்சன் எட்வா்ட், சூசைஅருள், உதவி தந்தை பிரவின், அருட் சகோதரிகள், பங்கு மக்கள் மற்றும் 10 கரை, ஆலய நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.