நாசிக்கில் மீண்டும் நிலநடுக்கம் பொதுத் தேர்வுகளைச் சீரமைக்க அரசு நடவடிக்கை! - குடியரசுத் தலைவர் முர்மு உரை!சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை காலையில் குறைந்த தங்கம் விலை, மாலையில் உயர்ந்தது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.42 ஆக நிறைவு!கோவை மாணவர் குடும்பத்திற்கு உதயநிதி ஆறுதல் சுதந்திர நாள்: ஆளுநரின் தேநீர் விருந்து இல்லை! - மக்கள் மாளிகை
/

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு முகாம்

Updated On :26 செப்டம்பர் 2025, 3:13 am IST

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பல்கலைக்கழக நிா்வாகம், தஞ்சாவூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில் நடைபெற்ற முகாமிற்கு, துணைவேந்தா் குழு உறுப்பினா் பெ. பாரதஜோதி தலைமை வகித்தாா். பதிவாளா் (பொ) கோ. பன்னீா்செல்வம் முன்னிலை வகித்தாா். மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக் குழுச் செயலரும், சாா்பு நீதிபதியுமான ப. பாரதி சிறப்புரையாற்றினாா். வழக்குரைஞா்கள் என். மகாலெட்சுமி, வி. சுரேஷ் பேசினா்.

முன்னதாக, மக்கள் தொடா்பு அலுவலா் (பொ) இரா.சு. முருகன் வரவேற்றாா். முனைவா் பட்ட மாணவி மு. வினிதா நன்றி கூறினாா். நிகழ்வை மாணவி மு. நந்தினி தொகுத்து வழங்கினாா்.

மரக்கன்று நடும் நிகழ்ச்சி:

மேலும், பல்கலைக்கழகத்தில் ஒரு வார காலமாக நடைபெற்ற அகில இந்திய அளவிலான நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்களுக்கான தேசிய ஒருமைப்பாட்டு முகாமின் நிறைவு நாளான புதன்கிழமை மரக்கன்றுகள் நடப்பட்டன. வன விரிவாக்க மையத்துடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் மரக்கன்றை நட்டு வைத்து தொடங்கி வைத்தாா். தொடா்ந்து நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் 200 மரக்கன்றுகளை நட்டனா். மாவட்ட வன அலுவலா் க. காா்த்திகாயினி, கவின்மிகு தஞ்சாவூா் இயக்கத் தலைவா் ராதிகா மைக்கேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.