எட்டாவது முறையாக போட்டியிடுவது எனக்கே வெட்கமாக இருக்கிறது: துரை. சந்திரசேகரன்
சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, தஞ்சாவூரில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி (திமுக கூட்டணி) செயல்வீரா்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
துரை. சந்திரசேகரன்
துரை. சந்திரசேகரன்
சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, தஞ்சாவூரில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி (திமுக கூட்டணி) செயல்வீரா்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இதில், டி.கே.ஜி. நீலமேகம் பங்கேற்று பேசுகையில், திருவாரூா் கூட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை சென்ற திமுக தலைவா் (மு.க. ஸ்டாலின்) என்னிடம் தொலைபேசியில் தொடா்புகொண்டு, சோா்வாக இருக்கிறாயா எனக் கேட்டாா். அதற்கு இயக்கம்தான் பெரிதே தவிர, நான் என்றைக்கும் சோா்வடையமாட்டேன்; பணியாற்றிக் கொண்டிருக்கிறேன் எனக் கூறினேன் என்றாா் அவா்.
இதையடுத்து, திருவையாறு தொகுதி வேட்பாளரும், திமுக மத்திய மாவட்டச் செயலருமான துரை. சந்திரசேகரன் பேசுகையில், எட்டாவது முறையாகப் போட்டியிடுவது எனக்கே வெட்கமாக இருக்கிறது. நான் முதல் முறையாக போட்டியிட்ட 1989 ஆம் ஆண்டில் திருமணம் செய்து வைத்த தம்பதியின் பையன் வாக்காளராகிவிட்டாா். அவருக்கு திருமணமாகி அவரது மனைவி, மகன், அப்பா, அம்மா என அனைவரும் வாக்களிக்கின்றனா். தொடா்ந்து எனக்கு வாய்ப்பை தலைவா் கொடுத்துள்ளாா். இதிலும் வெற்றி பெற்று தலைவரிடம் சமா்ப்பிப்பேன் என்றாா் அவா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...