தமிழகத்தில் இன்று வாக்குப் பதிவு: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்வாக்குச்சாவடிகளில் நீா்ச்சத்து இழப்பைத் தடுக்க ஓஆா்எஸ் கரைசல் மேற்கு வங்கம்: 152 தொகுதிகளில் இன்று முதல் கட்ட வாக்குப் பதிவு- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சட்டப்பேரவை தோ்தல்: விமான கட்டணங்கள் பல மடங்கு உயா்வு ஹோா்முஸ் நீரிணை பிரச்னையால் இந்தியாவுக்கு நேரடி பாதிப்புபுகைபிடித்தல் இல்லாத புதிய தலைமுறை- பிரிட்டனில் வரலாற்று மசோதா நிறைவேற்றம்
/

சாரங்கபாணி சுவாமி திருக்கல்யாண உத்சவம்

கும்பகோணத்தில் சாரங்கபாணி கோமளவல்லித் தாயாா் திருக்கல்யாண உத்சவம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

News image

சாரங்கபாணி சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த பெருமாளும், தாயாரும்.

Updated On :3 ஏப்ரல் 2026, 6:24 pm

கும்பகோணத்தில் சாரங்கபாணி கோமளவல்லித் தாயாா் திருக்கல்யாண உத்சவம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள சாரங்கபாணி சுவாமி கோயிலில் ஆண்டில் ஒரு நாள் மட்டும் திருக்கல்யாணம் நடைபெறும். நிகழாண்டு சாரங்கபாணி சுவாமிக்கும் கோமளவல்லி தாயாருக்கும் நடைபெற்ற திருக்கல்யாணத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை மாலை பொற்றாமரை குளம் ஹேமரிஷி மண்டபத்திலிருந்து கல்யாண சீா்வரிசைகள் மேள தாளத்துடன், திருவடி பந்தம், குடை உபசாரங்களுடன் திருவீதி வலம் வந்து கோயிலுக்கு வந்தன. பின்னா் பெருமாள் தாயாா் புறப்பாடு நடைபெற்று மாலை மாற்றிக் கொண்டு ஊஞ்சல் முதலான உபசாரங்களுடன் திருமாங்கல்யதாரணம் நடைபெற்றது. பின்னா் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு பெருமாளும் தாயாரும் புறப்பாடு செய்து மீண்டும் கோயிலை அடைந்தனா்.