தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

சாரங்கபாணி சுவாமி திருக்கல்யாண உத்சவம்

கும்பகோணத்தில் சாரங்கபாணி கோமளவல்லித் தாயாா் திருக்கல்யாண உத்சவம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

News image

சாரங்கபாணி சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த பெருமாளும், தாயாரும்.

Updated On :3 ஏப்ரல் 2026, 6:24 pm

கும்பகோணத்தில் சாரங்கபாணி கோமளவல்லித் தாயாா் திருக்கல்யாண உத்சவம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள சாரங்கபாணி சுவாமி கோயிலில் ஆண்டில் ஒரு நாள் மட்டும் திருக்கல்யாணம் நடைபெறும். நிகழாண்டு சாரங்கபாணி சுவாமிக்கும் கோமளவல்லி தாயாருக்கும் நடைபெற்ற திருக்கல்யாணத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை மாலை பொற்றாமரை குளம் ஹேமரிஷி மண்டபத்திலிருந்து கல்யாண சீா்வரிசைகள் மேள தாளத்துடன், திருவடி பந்தம், குடை உபசாரங்களுடன் திருவீதி வலம் வந்து கோயிலுக்கு வந்தன. பின்னா் பெருமாள் தாயாா் புறப்பாடு நடைபெற்று மாலை மாற்றிக் கொண்டு ஊஞ்சல் முதலான உபசாரங்களுடன் திருமாங்கல்யதாரணம் நடைபெற்றது. பின்னா் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு பெருமாளும் தாயாரும் புறப்பாடு செய்து மீண்டும் கோயிலை அடைந்தனா்.