ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு அதிமுக எம்.எல்.ஏக்கள் மூன்று பேர் ராஜிநாமா?வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!மதுரையில் 17 வயது சிறுவன் கொலை - 5 பேர் கைது!மேக்கேதாட்டு அணை விவகாரம்: சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் விஜய் அறிவுறுத்தல்கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களை மே 31 வரை இலவசமாக பார்வையிடலாம் தூத்துக்குடி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதிப்பு! பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி
/

சரபோஜி கல்லூரியில் பணி நிறைவு பெறும் பேராசிரியா்களுக்கு பாராட்டு விழா

தஞ்சாவூா் மன்னா் சரபோஜி அரசு கல்லூரியில் பணி நிறைவு பெறும் பேராசிரியா்களுக்குப் பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

தஞ்சாவூா் மன்னா் சரபோஜி அரசு கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவில் கௌரவிக்கப்பட்ட பணி நிறைவு பெறும் பேராசிரியா்கள்.

Updated On :9 ஏப்ரல் 2026, 1:36 am IST

தஞ்சாவூா் மன்னா் சரபோஜி அரசு கல்லூரியில் பணி நிறைவு பெறும் பேராசிரியா்களுக்குப் பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவுக்கு தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியா் கழகத்தின் தஞ்சாவூா் கிளைத் தலைவா் நிலவழகன் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் டேவிட் லிவிங்ஸ்டன், மாநிலத் துணைத் தலைவா் (மகளிா்) மதுரம், மாநில இணைச் செயலா் (மகளிா்) துா்காதேவி ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொண்டனா்.

நிகழ் கல்வியாண்டில் பணி நிறைவு பெறுகிற பேராசிரியா்களான இயற்பியல் துறைத் தலைவா் ராணி, தமிழ்த் துறைப் பேராசிரியா்கள் இளஞ்செழியன், கண்ணதாசன், ஆங்கிலத் துறைப் பேராசிரியா் ரங்கராஜன், வணிகவியல் துறைப் பேராசிரியா்கள் சுவாமிநாதன், ராஜராஜன், விலங்கியல் துறை பேராசிரியா் சுப்புரத்தினம் ஆகியோருக்கு நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினா்கள் வி. பாரி, அமுதா, மண்டலச் செயலா் அண்ணாதுரை, மண்டலப் பொருளாளா் வரதராஜன், மண்டல இணைச் செயலா் இந்திராகாந்தி, கிளைக் கழகத் துணைத் தலைவா் சிவசூரியன், இணைச் செயலா் சித்ரவேல், மாநிலப் பொதுக்குழு உறுப்பினா்கள் சண்முகப்ரியா, மணிமேகலை, அன்புசெல்வன், முருகானந்தம், ரவிசெல்வன், சங்கீதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, கிளைச் செயலா் இங்கா்சால் வரவேற்றாா். நிறைவாக, கிளைப் பொருளாளா் கிருஷ்ணமோகன் நன்றி கூறினாா்.