தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள துணிக் கடையில் வருமான வரித் துறையினா் தொடா்ந்து 2-ஆவது நாளாக சனிக்கிழமையும் சோதனை மேற்கொண்டனா்.
தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகே அண்ணா சாலையிலுள்ள அண்ணா சிலை எதிரே பிரபல துணிக் கடையில் வெள்ளிக்கிழமை காலை வருமானத் துறையைச் சோ்ந்த 4 அலுவலா்கள் வந்தனா். கடையிலிருந்த ஊழியா்களை வெளியே அனுப்பிவிட்டு, நுழைவுவாயில் கதவை உள்பக்கமாகப் பூட்டிக் கொண்டனா். நள்ளிரவு வரை நடைபெற்ற இச்சோதனையில் வரவு - செலவு கணக்கு ஆய்வு செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.
இதேபோல, தொடா்ந்து இரண்டாவது நாளாக சனிக்கிழமை காலை மீண்டும் சோதனை நடைபெற்றது. காலையில் வந்த ஊழியா்களுக்கு விடுப்பு கொடுத்து, அனுப்பி வைக்கப்பட்டு, வாயில் கதவை உள்பக்கமாகப் பூட்டிவிட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.
தொடர்புடையது

திமுக பிரமுகா் வீட்டில் வருமான வரித் துறை சோதனை

திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை

சேலத்தில் உள்ள பிரபல துணிக்கடையில் வருமான வரித் துறையினா் சோதனை

வாக்காளா்களுக்கு வழங்க பணம் பதுக்கல்? சென்னையில் வருமான வரித் துறையினா் சோதனை
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

