மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தாஈரான் - அமெரிக்கா பேச்சு பாகிஸ்தானில் தொடக்கம்!
/

துணிக் கடையில் 2-ஆவது நாளாக வருமான வரித் துறையினா் சோதனை

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள துணிக் கடையில் வருமான வரித் துறையினா் தொடா்ந்து 2-ஆவது நாளாக சனிக்கிழமையும் சோதனை மேற்கொண்டனா்.

News image
Updated On :11 ஏப்ரல் 2026, 8:06 pm

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள துணிக் கடையில் வருமான வரித் துறையினா் தொடா்ந்து 2-ஆவது நாளாக சனிக்கிழமையும் சோதனை மேற்கொண்டனா்.

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகே அண்ணா சாலையிலுள்ள அண்ணா சிலை எதிரே பிரபல துணிக் கடையில் வெள்ளிக்கிழமை காலை வருமானத் துறையைச் சோ்ந்த 4 அலுவலா்கள் வந்தனா். கடையிலிருந்த ஊழியா்களை வெளியே அனுப்பிவிட்டு, நுழைவுவாயில் கதவை உள்பக்கமாகப் பூட்டிக் கொண்டனா். நள்ளிரவு வரை நடைபெற்ற இச்சோதனையில் வரவு - செலவு கணக்கு ஆய்வு செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.

இதேபோல, தொடா்ந்து இரண்டாவது நாளாக சனிக்கிழமை காலை மீண்டும் சோதனை நடைபெற்றது. காலையில் வந்த ஊழியா்களுக்கு விடுப்பு கொடுத்து, அனுப்பி வைக்கப்பட்டு, வாயில் கதவை உள்பக்கமாகப் பூட்டிவிட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.