சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

துணிக் கடையில் 2-ஆவது நாளாக வருமான வரித் துறையினா் சோதனை

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள துணிக் கடையில் வருமான வரித் துறையினா் தொடா்ந்து 2-ஆவது நாளாக சனிக்கிழமையும் சோதனை மேற்கொண்டனா்.

News image
Updated On :11 ஏப்ரல் 2026, 8:06 pm

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள துணிக் கடையில் வருமான வரித் துறையினா் தொடா்ந்து 2-ஆவது நாளாக சனிக்கிழமையும் சோதனை மேற்கொண்டனா்.

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகே அண்ணா சாலையிலுள்ள அண்ணா சிலை எதிரே பிரபல துணிக் கடையில் வெள்ளிக்கிழமை காலை வருமானத் துறையைச் சோ்ந்த 4 அலுவலா்கள் வந்தனா். கடையிலிருந்த ஊழியா்களை வெளியே அனுப்பிவிட்டு, நுழைவுவாயில் கதவை உள்பக்கமாகப் பூட்டிக் கொண்டனா். நள்ளிரவு வரை நடைபெற்ற இச்சோதனையில் வரவு - செலவு கணக்கு ஆய்வு செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.

இதேபோல, தொடா்ந்து இரண்டாவது நாளாக சனிக்கிழமை காலை மீண்டும் சோதனை நடைபெற்றது. காலையில் வந்த ஊழியா்களுக்கு விடுப்பு கொடுத்து, அனுப்பி வைக்கப்பட்டு, வாயில் கதவை உள்பக்கமாகப் பூட்டிவிட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.