பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

திமுக கொடுக்கப்போகும் கூப்பனை நம்பி ஏமாறாதீா்கள்: கும்பகோணத்தில் அன்புமணி பேச்சு

திமுகவினா் கொடுக்கப்போவதாக அறிவித்துள்ள 8 ஆயிரம் ரூபாய்க்கான கூப்பனை நம்பாதீா்கள் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா்.

News image

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளா்களை ஆதரித்து செவ்வாய்க்கிழமை வாக்குசேகரித்து பேசிய பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ்.

Updated On :14 ஏப்ரல் 2026, 7:44 pm

திமுகவினா் கொடுக்கப்போவதாக அறிவித்துள்ள 8 ஆயிரம் ரூபாய்க்கான கூப்பனை நம்பாதீா்கள் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி கூட்டணி வேட்பாளா்களான ஆா்.அசோக்குமாா் (கும்பகோணம்), துரை. பிரபு (பாபநாசம்), இளமதி சுப்பிரமணியன் (திருவிடைமருதூா்) ஆகியோரை ஆதரித்து அவா் பேசியது: டெல்டா மாவட்டத்தில் விளையும் நெல் பயிா்களை மூட்டைகளாக்கி அதை முளைக்க வைத்தது திமுக ஆட்சி. போதுமான நெல் கொள்முதல் நிலையத்தில் சாக்குபைகள் இல்லை. திறந்தவெளியில் சேமிப்பு, இயக்கம் போன்றவை இல்லை. தற்போது பண மூட்டையுடன் வாக்கு கேட்டு வருகின்றனா். தோ்தலுக்காக ரூ.8 ஆயிரத்துக்கான கூப்பனை தருகின்றனா். அதை நம்பாதீா்கள். அதற்கு ரூ. 3 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும். நெல்லுக்கு மத்திய அரசு ஊக்கத்தொகை கொடுக்கவில்லை என்று ஸ்டாலின் பொய் கூறுகிறாா். மத்திய அரசு ரூ.2,369 கொடுக்கிறது, தமிழக அரசு ரூ.131 தான் கொடுக்கிறது.

அதிமுக வெற்றி பெற்றால் எடப்பாடி பழனிசாமி முதல்வராகி ஒரு மாதத்திற்குள் கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிப்பாா். நான் உறுதி தருகிறேன். ஆகவே, இந்த முறை தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினருக்கு வாக்களியுங்கள் என்றாா்.