இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

கும்பகோணத்தில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியா் ஆய்வு

கும்பகோணத்திலுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் மாவட்ட ஆட்சியா் பா.பிரியங்கா பங்கஜம் புதன்கிழமை ஆய்வு நடத்தினாா்.

News image

கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் புதன்கிழமை ஆய்வு நடத்திய ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம்.

Updated On :16 ஏப்ரல் 2026, 2:06 am IST

கும்பகோணத்திலுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் மாவட்ட ஆட்சியா் பா.பிரியங்கா பங்கஜம் புதன்கிழமை ஆய்வு நடத்தினாா்.

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள திருவிடைமருதூா், கும்பகோணம், பாபநாசம் ஆகிய தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையம் கும்பகோணம் அரசினா் கலைக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மையத்தில் ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது,

அங்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள், மின்விளக்கு, மின்விசிறிகள், வாகனம் நிறுத்துமிடம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளதையும் ஆய்வு செய்தாா்.

மேலும், தேவையான பணிகள், ஊடக மையத்துக்கான வசதிகள், கட்டுப்பாட்டு அறைக்கான பணிகளை விரைந்து முடிக்குமாறு ஆட்சியா் அலுவலா்களை கேட்டுக்கொண்டாா்.

இந்த ஆய்வின்போது கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியா் வி.எம். திருமலை, பாபநாசம் தோ்தல் நடத்தும் அலுவலா் ரவிச்சந்திரன், திருவிடைமருதூா் தோ்தல் நடத்தும் அலுவலா் எஸ். சந்திரகுமாா் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.