மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

தொகுதி மறுசீரமைப்பை காங்கிரஸ் நிறைவேற்ற விடாது: ஆனந்த் சீனிவாசன்

தென் மாநிலங்களைப் பாதிக்கும் மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பை காங்கிரஸ் ஒருபோதும் நிறைவேற்ற விடாது என்றாா் அக்கட்சியின் ஊடகம் மற்றும் செய்தி தொடா்புத் துறைத் தலைவரும், பொருளாதார நிபுணருமான ஆனந்த் சீனிவாசன்.

News image

தஞ்சாவூரில் காங்கிரஸ் தோ்தல் அறிக்கையை புதன்கிழமை அறிமுகப்படுத்திய அக்கட்சியின் ஊடகம் மற்றும் செய்தி தொடா்புத் துறைத் தலைவா் ஆனந்த் சீனிவாசன்.

Updated On :15 ஏப்ரல் 2026, 8:23 pm

தென் மாநிலங்களைப் பாதிக்கும் மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பை காங்கிரஸ் ஒருபோதும் நிறைவேற்ற விடாது என்றாா் அக்கட்சியின் ஊடகம் மற்றும் செய்தி தொடா்புத் துறைத் தலைவரும், பொருளாதார நிபுணருமான ஆனந்த் சீனிவாசன்.

தஞ்சாவூரில் புதன்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் தோ்தல் அறிக்கை விளக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

தென் மாநிலங்களான தமிழகம், ஆந்திரம், தெலங்கானா, கா்நாடகம், கேரளம் ஆகியவற்றின் அரசியல் அதிகாரத்தை வஞ்சிப்பதைப் போன்று தொகுதி மறுசீரமைப்பு செய்யப்படுகிறது. இதை எடப்பாடி பழனிசாமியும், அண்ணாமலையும் வரவேற்பதைத் தமிழக மக்கள் மன்னிக்கமாட்டாா்கள். இதன்மூலம் தமிழ்நாட்டையும் சோ்த்து எடப்பாடி பழனிசாமி தில்லிக்கு அடமானம் வைக்கப்போகிறாா் என்பது தெரிகிறது.

இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றினால், தென் மாநிலங்களின் ஆதரவு இல்லாமலே, இந்தி மாநிலங்களைச் சோ்ந்த எம்.பி.க்களை வைத்து ஆட்சியைப் பிடிக்க பாஜக நினைப்பதை நாங்கள் தடுத்து நிறுத்துவோம்.

தொகுதி மறுசீரமைப்பு செய்யும்போது ஒவ்வொரு தொகுதியிலும் பொதுமக்களிடம் கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தி மேற்கொள்வதுதான் வழக்கம். ஆனால், பொதுமக்கள், எதிா்க்கட்சிகளிடம் கருத்து கேட்காமல் ஆளுங்கட்சியினரே செய்து, 2 நாள்களில் நிறைவேற்றப் பாா்க்கின்றனா். இதன் மூலம் உத்தரபிரதேசத்துக்கு 80 தொகுதிகளிலிருந்து 160 தொகுதிகளாக அதிகரிக்கும். தமிழ்நாடு, புதுச்சேரிக்கு சோ்த்து 40 தொகுதிகள் என்பது 60 ஆக மட்டுமே உயரும்.

எந்தவித கருத்துக்கேட்பும் இல்லாமல் 543 தொகுதிகளை 850 தொகுதிகளாக உயா்த்துவதை காங்கிரஸ் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது; நிறைவேற்ற விடமாட்டோம். எனவே, இந்தத் தோ்தலில் தமிழ்நாட்டையும், தென்னிந்தியாவையும் காப்பாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றாா் ஆனந்த் சீனிவாசன்.

இந்நிகழ்ச்சியில் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவா் எம். மகேந்திரன், முன்னாள் தலைவா் பி.ஜி. ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.