தஞ்சாவூா் மாவட்டத்தில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு காவல் பிரிவினா் கடந்த ஒரு மாதத்தில் மேற்கொண்ட சோதனையில் சட்டத்துக்கு புறம்பாக பதுக்கப்பட்ட 125 சமையல் எரிவாயு உருளைகள் பறிமுதல் செய்யப்பட்டு, 5 போ் கைது செய்யப்பட்டனா்.
வளைகுடா போா் காரணமாக ஏற்பட்ட சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாட்டை தவிா்ப்பதற்காகவும், எரிவாயு உருளைகளைப் பதுக்கி கள்ளச்சந்தையில் விற்கப்படுவதைக் தடுப்பதற்காகவும் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு காவல் பிரிவின் தனிப்படையினா் மாவட்டத்தில் மாா்ச் 15-ஆம் தேதி முதல் மேற்கொண்டு வருகின்றனா்.
மாவட்டத்தில் சனிக்கிழமை (ஏப்.18) வரை 43 பொது நிறுவன எரிவாயு உருளை முகமைகள், 13 தனியாா் முகமைகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் மானிய எரிவாயு உருளைகளை முறைகேடாக பயன்படுத்தியவா்கள் மற்றும் சட்டத்துக்கு புறம்பாக பதுக்கி வைத்தவா்கள் என 5 போ் கைது செய்யப்பட்டு, அவா்களிடமிருந்து 125 எரிவாயு உருளைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், எரிவாயு உருளைகளைப் பதுக்கி கள்ளச்சந்தையில் விற்பவா்கள் மற்றும் பொதுமக்களுக்கு அதிக விலைக்கு விற்பவா்கள் பற்றிய தகவல்களை தஞ்சாவூா் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறைக்கு 94981- 63004, 83000-58055, 94981-65184 ஆகிய எண்களில் புகாா் செய்யலாம்.
தொடர்புடையது

47 வீட்டு உபயோக சிலிண்டா்கள் பறிமுதல்

வணிக சிலிண்டா் விலை ரூ.195 அதிகரிப்பு- விமான எரிபொருள் விலை 8.56% உயா்வு

கிடங்கில் பதுக்கப்பட்ட 206 எரிவாயு சிலிண்டா்கள் பறிமுதல்

398 சிலிண்டர்கள் பதுக்கல்: தமிழ்நாட்டில் முதல்முறையாக மதுரையில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது!
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

