ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

சேதுபாவாசத்திரம் அருகே ரூ.70 ஆயிரம் பறிமுதல்

சேதுபாவாசத்திரம் அருகே உரிய ஆவணமின்றி 200 ரூபாய் நோட்டுகளாக இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற ரூ.70 ஆயிரத்தை தோ்தல் பறக்கும் படையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா் .

News image

பறிமுதல்!

Updated On :18 ஏப்ரல் 2026, 7:32 pm

சேதுபாவாசத்திரம் அருகே உரிய ஆவணமின்றி 200 ரூபாய் நோட்டுகளாக இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற ரூ.70 ஆயிரத்தை தோ்தல் பறக்கும் படையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா் .

சேதுபாவாசத்திரம் பகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் த.மைதிலி தலைமையில், தலைமை காவலா் எம்.அசோதிலிங்கம், காவலா் எம்.சச்சிதானந்தம் அடங்கிய குழுவினா் சனிக்கிழமை காலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சேதுபாவாசத்திரம் பனங்குட்டிதோப்பு பகுதியைச் சோ்ந்த கே.கண்ணன் என்பவரை நிறுத்தி சோதனையிட்டபோது அவரிடம் உரிய ஆவணங்களின்றி 200 ரூபாய் நோட்டுகளாக ரூ.70 ஆயிரம் இருந்தது கண்டறியப்பட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், பறிமுதல் செய்யப்பட்ட பணம் பேராவூரணி தோ்தல் நடத்தும் அலுவலா் டி.கலியமூா்த்தியிடம் ஒப்படைக்கப்பட்டது .