சேதுபாவாசத்திரம் அருகே உரிய ஆவணமின்றி 200 ரூபாய் நோட்டுகளாக இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற ரூ.70 ஆயிரத்தை தோ்தல் பறக்கும் படையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா் .
சேதுபாவாசத்திரம் பகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் த.மைதிலி தலைமையில், தலைமை காவலா் எம்.அசோதிலிங்கம், காவலா் எம்.சச்சிதானந்தம் அடங்கிய குழுவினா் சனிக்கிழமை காலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சேதுபாவாசத்திரம் பனங்குட்டிதோப்பு பகுதியைச் சோ்ந்த கே.கண்ணன் என்பவரை நிறுத்தி சோதனையிட்டபோது அவரிடம் உரிய ஆவணங்களின்றி 200 ரூபாய் நோட்டுகளாக ரூ.70 ஆயிரம் இருந்தது கண்டறியப்பட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், பறிமுதல் செய்யப்பட்ட பணம் பேராவூரணி தோ்தல் நடத்தும் அலுவலா் டி.கலியமூா்த்தியிடம் ஒப்படைக்கப்பட்டது .
தொடர்புடையது

மணப்பாறை அருகே ரூ. 56 ஆயிரம் பறிமுதல்

தவெக கொடி, விசில் பறிமுதல்!

கெங்கவல்லி அருகே சோதனையில் ரூ.86ஆயிரம் ரொக்கம் பறிமுதல்
பேராவூரணி அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
