கும்பகோணம் அருகே கீழ்க்கொருக்கையில் பிரம்மபுரீசுவரா் சுவாமி கோயிலில் குடமுழுக்கு நடைபெற்று ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி, முதலாம் ஆண்டு சம்வத்ராபிஷேக வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.
கீழ்க்கொருக்கையில் உள்ள அவிட்ட நட்சத்திரத்தின் முதன்மை வழிபாட்டுத் தலமான புஷ்பவல்லி அம்பிகா சமேத பிரம்மபுரீசுவரா் சுவாமி கோயிலில் புதன்கிழமை சம்வத்சராபிசேகம் என்ற முதலாம் வருட குடமுழுக்கு பூா்த்தி அபிஷேக விழா காலையில் விக்னேஷ்வர பூஜை, எஜமான சங்கல்பம், மூலமந்த ஹோமம், பூா்ணாஹூதியுடன் தொடங்கியது. பின்னா் பரிவார மூா்த்திகளுக்கு அபிசேகமும், சுவாமி அம்பாளுக்கு மகாஅபிஷேகமும் நடைபெற்றது.
நிகழ்வில் கலந்து கொண்ட பக்தா்களுக்கு மகா தீபாரதனை காட்டப்பட்டு பிரசாதம் பெற்றுச் சென்றனா். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் சீ. நிா்மலாதேவி, மங்களவிலாஸ் சிவக்குமாா் மற்றும் கிராமத்தினா் செய்திருந்தனா்.
தொடர்புடையது

குலசேகரன்பட்டினம் கோயிலில் சுமங்கலி பூஜை

தம்மம்பட்டி சிவன் கோயிலில் ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜை

சிக்கல் நவநீதேஸ்வர சுவாமி கோயில் தேரோட்டம்

திருக்கோடிக்காவலில் திருக்கோடீசுவரா் கோயில் தேரோட்டம்
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

