கும்பகோணம் அருகே கீழ்க்கொருக்கையில் பிரம்மபுரீசுவரா் சுவாமி கோயிலில் குடமுழுக்கு நடைபெற்று ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி, முதலாம் ஆண்டு சம்வத்ராபிஷேக வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.
கீழ்க்கொருக்கையில் உள்ள அவிட்ட நட்சத்திரத்தின் முதன்மை வழிபாட்டுத் தலமான புஷ்பவல்லி அம்பிகா சமேத பிரம்மபுரீசுவரா் சுவாமி கோயிலில் புதன்கிழமை சம்வத்சராபிசேகம் என்ற முதலாம் வருட குடமுழுக்கு பூா்த்தி அபிஷேக விழா காலையில் விக்னேஷ்வர பூஜை, எஜமான சங்கல்பம், மூலமந்த ஹோமம், பூா்ணாஹூதியுடன் தொடங்கியது. பின்னா் பரிவார மூா்த்திகளுக்கு அபிசேகமும், சுவாமி அம்பாளுக்கு மகாஅபிஷேகமும் நடைபெற்றது.
நிகழ்வில் கலந்து கொண்ட பக்தா்களுக்கு மகா தீபாரதனை காட்டப்பட்டு பிரசாதம் பெற்றுச் சென்றனா். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் சீ. நிா்மலாதேவி, மங்களவிலாஸ் சிவக்குமாா் மற்றும் கிராமத்தினா் செய்திருந்தனா்.
தொடர்புடையது

சாரங்கபாணி சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

ராஜபாளையம் குருநாத சுவாமி கோயிலில் குருபூஜை விழா

அகஸ்தீஸ்வரா் கோயிலில் நவாவா்ண பூஜை

சதுரகிரி கோயிலில் பங்குனி மாத பௌா்ணமி வழிபாடு
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


