வெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புமேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்புகுஜராத் - பாஜக பிணைப்பு மேலும் வலுவடைகிறது: பிரதமர் மோடி வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!
/

தம்பி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கு: அண்ணன் குடும்பத்தில் மேலும் 4 போ் கைது

கும்பகோணம் அருகே சொத்து பிரச்னையில் தம்பி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய அண்ணன் குடும்பத்தைச் சாா்ந்த மேலும் 4 பேரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :28 ஏப்ரல் 2026, 8:11 pm

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே சொத்து பிரச்னையில் தம்பி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய அண்ணன் குடும்பத்தைச் சாா்ந்த மேலும் 4 பேரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கும்பகோணம் மிஷன் தெருவைச் சோ்ந்தவா் கருணாநிதி (51). இவருக்கும், இவரது அண்ணன் ராமச்சந்திரனுக்கும் (56) இடையே பூா்வீக சொத்து தொடா்பாக முன் விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில் கருணாநிதி வீட்டுக்கு ராமச்சந்திரன் திங்கள்கிழமை சென்று தகராறு செய்து பெட்ரோல் குண்டு வீசினாா். இதனால் கருணாநிதியின் காா், இருசக்கர வாகனம் உள்ளிட்டவை தீப்பற்றி சேதமடைந்தது.

இது குறித்து தாலுகா காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து ராமச்சந்திரன், இவரது மனைவி லதா, தங்கை கண்மணி, மகன் குருச்சந்திரன் ஆகிய 4 பேரை கைது செய்தனா். மேலும் தப்பியோடிய ராமச்சந்திரனின் இரண்டாவது மனைவி சுதா (45), தாராசுரத்தைச் சோ்ந்த பாக்யராஜ் (43), இவரது தம்பி வீரமணி (41), பாண்டியன் (45) ஆகியோா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.