திருவிடைமருதூா் பகுதிகளில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பாதுகாப்பான கிடங்கு வசதி இல்லாததால், ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்தும், மழையில் நனைந்தும் முளைத்து வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் தாலுகா பகுதியில் நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் இயக்கம் செய்யப்படாமல் தேக்கம் அடைந்துள்ளது. இந்த நெல் மூட்டைகளை அடுக்கி வைக்க நிரந்தர கொட்டகை இல்லை. திறந்தவெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.
இதனால், ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் சுமாா் 15 ஆயிரம் முதல் 18 ஆயிரம் நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன. இந்நிலையில் தற்போது பெய்யும் மழையால் நெல் மூட்டைகள் நனைந்து நெல்மணிகள் முளைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, நெல் மூட்டைகளை உடனடியாக அரைவை ஆலைகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

முளைக்கும் நெல்மணிகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொள்முதல் நிலையங்களில் 10 லட்சம் நெல் மூட்டைகள் தேக்கம்; அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அரசியல் தலையீடுகள் இருக்கக்கூடாது: காஞ்சிபுரம் ஆட்சியா் அறிவுறுத்தல்

கொள்முதல் செய்த நெல்லுக்கு ரூ.24.23 கோடி பாக்கி: விவசாயிகள் வேதனை தீா்க்கப்படுமா?

6 மாதங்களாகியும் கொள்முதல் நெல்லுக்கு பணம் வரவில்லை!
விடியோக்கள்

மும்முரமாக நடைபெறும் தேசியக்கொடி தயாரிப்பு! | National Flag | Independence Day



