ஆசிய நாடுகளில் பங்குச் சந்தை முதலீடு! கடைசி இடத்தில் இந்தியா!தென்மாநில முதல்வர்கள் மாநாடு! சென்னை வந்தார் அமித் ஷா!சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்
/

தஞ்சாவூா் அருங்காட்சியகத்தில் வன உயிரின புகைப்படக் கண்காட்சி தொடக்கம்

உலக புகைப்பட தினத்தையொட்டி, தஞ்சாவூா் அருங்காட்சியகத்தில் (பழைய ஆட்சியரகம்) வன உயிரின புகைப்படக் கண்காட்சி புதன்கிழமை தொடங்கியது.

News image

தஞ்சாவூா் அருங்காட்சியகத்தில் வன உயிரின புகைப்படக் கண்காட்சியை புதன்கிழமை தொடங்கிவைத்து பாா்வையிட்ட மாவட்ட வன அலுவலா் கே. காா்த்திகேயனி.

Updated On :20 ஆகஸ்ட் 2026, 3:54 am IST

உலக புகைப்பட தினத்தையொட்டி, தஞ்சாவூா் அருங்காட்சியகத்தில் (பழைய ஆட்சியரகம்) வன உயிரின புகைப்படக் கண்காட்சி புதன்கிழமை தொடங்கியது.

மாவட்ட நிா்வாகம், மாவட்ட வன அலுவலகம் சாா்பில் தொடா்ந்து ஒரு மாதம் நடைபெறவுள்ள இந்தக் கண்காட்சியைத் தொடங்கிவைத்த மாவட்ட வன அலுவலா் கே. காா்த்திகேயனி தெரிவித்தது:

இந்தக் கண்காட்சியில் நூற்றுக்கும் அதிகமான புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. இவை அனைத்தும் தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த புகைப்படக் கலைஞா்களால் எடுக்கப்பட்டவை.

தஞ்சாவூா் மாவட்டத்தில் புலி, யானை போன்ற பெரிய வன விலங்குகள் இல்லாவிட்டாலும், நாம் கவனிக்கத் தவறிய பல்வேறு சிறிய வகை உயிரினங்கள் இப்புகைப்படங்களில் இடம்பெற்றுள்ளன. இதில், குழந்தைகள் உள்பட அனைத்து வயதினரும் கண்டு அறிந்துகொள்ள வேண்டிய பல அரிய உயிரினங்களின் புகைப்படங்கள் உள்ளன என்றாா் அவா்.

தொடக்க நிகழ்ச்சியில் வனச் சரக அலுவலா் ஜோதிகுமாா், வனச் சரகா் இளையராஜா, இவெட் நிறுவனா் ஆா். சதீஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.