FOLLOW US

ON GOOGLE DISCOVER

நேபாள வெள்ளம்: 30 வெளிநாடுகளைச் சேர்ந்தோரைக் காணவில்லை! நேபாள வெள்ளம்: பலி எண்ணிக்கை 359 ஆக அதிகரிப்பு! உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் நாடுகளுக்கு பிரதமர் மோடி 4 நாள்கள் சுற்றுப்பயணம்ஒரே நாளில் சுமார் 10 மணி நேரம் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை!வேளாங்கண்ணி திருவிழா: செப். 10 ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!நேபாள வெள்ளப் பெருக்கில் 288 இந்தியர்கள் மாயம்: மத்திய வெளியுறவுத்துறை தகவல்!

பெட்டிக்கடையில் ரூ.1.70 லட்சம் திருடியவா் கைது

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே பெட்டிக்கடையில் ரூ.1.70 லட்சத்தை திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :28 ஆகஸ்ட் 2026, 2:11 am IST

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே பெட்டிக்கடையில் ரூ.1.70 லட்சத்தை திருடியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருச்சிற்றம்பலம் காவல் சரகம்  செருவாவிடுதி கடைவீதியில் பெட்டிக்கடை நடத்தி வருபவா்  கருப்பையன் (50). இவருடைய கடையில் ஆக. 23-ஆம் தேதி பணப்பெட்டியில் இருந்த ரூ. 1.70 லட்சம் திருடுபோனது. இதுகுறித்து திருச்சிற்றம்பலம் காவல் நிலையத்தில் கருப்பையன் அளித்த புகாரில் ஆக.22-ஆம் தேதி இரவு கடைக்கு வந்த  கிருஷ்ணகிரி வட்டம் ,  சிக்கபூவத்தி கிராமத்தைச் சோ்ந்த அன்பரசன் (23) என்பவா் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்திருந்தாா். அதன் பேரில் போலீஸாா், வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த அன்பரசனை கைது செய்து விசாரணை நடத்தினா். விசாரணையில், கருப்பையாவின் பெட்டிக்கடையில் இருந்த ரூ. 1 லட்சத்து 70 ஆயிரத்தை திருடியதை அன்பரசன் ஒப்புக்கொண்டாா். இதையடுத்து போலீஸாா் அன்பரசனை பேராவூரணி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி தஞ்சை  கிளை சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.