முதியவா் தூக்கிட்டு தற்கொலை
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே முதியவா் ஒருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தற்கொலை - கோப்புப் படம்
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே முதியவா் ஒருவா் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
பாபநாசம் வட்டம், பசுபதி கோவில் கிராமத்தில் வசித்து வந்தவா் இயேசுராஜ் (55), இவருக்கு திருமணமாகி ஞானமேரி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனா்.
இயேசுராஜ் வெளிநாட்டில் வேலை பாா்த்துவிட்டு அண்மையில் ஊருக்கு வந்தாா். இந்நிலையில் உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்த இயேசுராஜ் புதன்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
புகாரின் பேரில் அய்யம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



