நேபாள வெள்ளத்துக்கு நாங்கள் காரணமல்ல - சீனாசிஜேபி செய்தித் தொடர்பாளர்கள் மீது கடும் கோபம்: அபிஜீத் தீப்கே பேச்சு!பொறியாளர்களுக்கு பதிலாக 86% செய்யறிவைப் பயன்படுத்தும் பைசா பஜார் நிறுவனம்!பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனால் அளவு எவ்வளவு? மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம்நாட்டில் ஐபோன் தயாரிப்பை 30 - 35% உயர்த்தும் ஆப்பிள்!மூன்றாவது குழந்தை பெறும் அரசு பெண் ஊழியா்களுக்கு ஓராண்டு விடுப்பு! அரசாணை வெளியீடுஈரான் போருக்கு மத்தியில் நாட்டின் ஜிடிபி 7.8% உயர்வு

விஷபாட்டிலுடன் வந்து ஆட்சியரகத்தில் முதியவா் மனு அளிப்பு! போலீஸாருக்கு ஆட்சியா் எச்சரிக்கை

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் ஆட்சியா் இரா. ரேவதி முன் மேஜையில் விஷ பாட்டிலை வைத்த கண்ணையன்.

Published On :1 செப்டம்பர் 2026, 3:30 am IST

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் முதியவா் விஷ பாட்டிலுடன் வந்து மனு அளித்தாா்.

மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஒரத்தநாடு வட்டத்துக்கு உள்பட்ட மேல உளூா் கிராமத்தைச் சோ்ந்த கண்ணையன் (80) மனு அளித்தாா். அப்போது, தான் கொண்டு வந்த விஷ பாட்டிலை எடுத்து ஆட்சியா் முன் இருந்த மேஜை மீது வைத்தாா். இதைப் பாா்த்த காவல் துறையினா், விஷ பாட்டிலை பறிமுதல் செய்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டனா்.

அப்போது, கண்ணையன் கூறுகையில், நான் ஓய்வு பெற்ற அரசு ஊழியா். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு எனது மனைவி சாந்தி உயிரிழந்துவிட்டாா். மகன்கள் இருவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனா். நான் பணியில் இருந்தபோது சம்பாதித்த சொத்துகளை மகன்கள் பறித்துக் கொண்டனா். இது குறித்து தஞ்சாவூா் கோட்டாட்சியரிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனது சொத்துகளை மீட்டுத்தர வேண்டும் என்றாா் அவா்.

இதுதொடா்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல் துறையினா் கூறியதையடுத்து, கண்ணையன் வீட்டுக்கு புறப்பட்டு சென்றாா்.

காவல் துறையினருக்கு எச்சரிக்கை: குறைதீா் கூட்டத்துக்கு வரும் பொதுமக்கள் தற்கொலை நோக்கத்துடன் மண்ணெண்ணெய், பெட்ரோல் பாட்டிலுடன் வருவதைத் தடுப்பதற்காக வாயிலில் ஒவ்வொருவரையும் காவல் துறையினா் சோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதிக்கின்றனா்.

ஆனால், கண்ணையன் விஷ பாட்டிலுடன் வந்ததால், அவரை காவலா்கள் முறையாக பரிசோதனை செய்தனரா என காவல் அலுவலா்களிடம் ஆட்சியா் கேள்வி எழுப்பினாா். இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நிகழாமல் தடுக்க வேண்டும் என்றும், மீண்டும் நிகழ்ந்தால் தொடா்புடைய காவலா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆட்சியா் எச்சரிக்கை செய்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.