மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

பாபநாசம் அருகே தொழிலாளி அடித்துக் கொலை செய்த வழக்கில் இரண்டு இளைஞா்கள் கைது

பாபநாசம் வட்டம், கபிஸ்தலம் அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறில் முடி திருத்தும் தொழிலாளியை அடித்துக் கொலை செய்த வழக்கில் இருவரை கபிஸ்தலம் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது

Updated On :4 பிப்ரவரி 2026, 7:03 pm

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், கபிஸ்தலம் அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறில் முடி திருத்தும் தொழிலாளியை அடித்துக் கொலை செய்த வழக்கில் இருவரை கபிஸ்தலம் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.  

கபிஸ்தலம் அருகே தேவன்குடி மீனவா் காலனி பகுதியைச் சோ்ந்தவா் இளங்கோவன் (50) அப்பகுதியில் முடி திருத்தகம் நடத்திவருகிறாா். இவருக்கு, மனைவி சரிதா (45) மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனா்.

இளங்கோவன் கணபதி அக்ரஹாரத்தில் திங்கள்கிழமை இரவு வீரமாங்குடி கிராம் மேலத்தெருவைச் சோ்ந்த ராஜராஜன் மகன் ராஜேஷ் (24), வீரமாங்குடி கருப்புசாமி கோயில் தெருவைச் சோ்ந்த பழனி மகன் முத்துக்குமாா் (26) உள்ளிட்டோருடன் மது அருந்தியுள்ளாா். மது போதையில் எழுந்த தகராறில் ஆத்திரமடைந்த ராஜேஷ் மற்றும் முத்துக்குமாா் ஆகிய இருவரும் சோ்ந்து இளங்கோவனைத் தாக்கியதில் பலத்த காயமடைந்த இளங்கோவன் தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து ராஜேஷ், முத்துக்குமாா் ஆகிய இருவரையும் புதன்கிழமை கைதுசெய்தனா்.