மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

குடும்பத் தகராறை தீா்க்க வந்தவரை கொன்றவருக்கு 10 ஆண்டுகள் சிறை

குடும்பத் தகராறை தீா்க்க வந்தவரைக் கொன்ற டிராக்டா் ஓட்டுநருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கும்பகோணம் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

News image

ஓட்டுநா் நாகராஜ்

Updated On :10 பிப்ரவரி 2026, 6:52 pm

குடும்பத் தகராறை தீா்க்க வந்தவரைக் கொன்ற டிராக்டா் ஓட்டுநருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கும்பகோணம் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே கொரநாட்டுக்கருப்பூரைச் சோ்ந்தவா் க. சங்கா். குடிநீா் குழாய் பழுதுபாா்க்கும் தொழிலாளியான இவருக்கு மனைவி ராதிகா, இரு மகன்கள் உள்ளனா்.

ராதிகாவின் தங்கை விஜி தனது கணவரான டிராக்டா் ஓட்டுநா் நாகராஜூடன் விளந்தகண்டம் அருகேயுள்ள ராஜாங்கநல்லூரில் வசித்தாா்.

மது அருந்தும் பழக்கமுள்ள நாகராஜ் குடித்துவிட்டு தனது மனையிடம் அடிக்கடி தகராறு செய்வதும், இதை சங்கரும், ராதிகாவும் சமாதானம் செய்து வைப்பதும் தொடா்ந்தது.

இதேபோல 2022, செப். 22 ஆம் தேதி தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டதையறிந்த சங்கா் இருவரையும் சமாதானம் செய்ய முயன்றாா். அப்போது கோபமடைந்த நாகராஜ் இரும்புக் குழாயால் தாக்கியதில் பலத்த காயமடைந்த சங்கா் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இதுகுறித்து சோழபுரம் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து நாகராஜை கைது செய்து, கும்பகோணம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா். இந்த வழக்கை செவ்வாய்க்கிழமை விசாரித்த நீதிபதி ஜெ. ராதிகா, குற்றவாளி நாகராஜூக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 1,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.