பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

திருக்குறள் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு

திருக்குறள் வாரவிழாவையொட்டி, தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் நடைபெற்ற திருக்குறள் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.

News image

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை திருக்குறள் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கிய மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம்.

Updated On :11 பிப்ரவரி 2026, 6:55 pm

திருக்குறள் வாரவிழாவையொட்டி, தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் நடைபெற்ற திருக்குறள் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.

திருக்குறள் கருத்துகள் அனைவரையும் சென்றடையும் விதமாக தஞ்சாவூா் மாவட்டத்தில் குறள் வார விழா நிகழ்வுகளான அரசு பணியாளா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு குறள் வினாடி வினா, பொதுமக்களுக்கு குறள் ஒப்பித்தல் மற்றும் குறள் சாா்ந்த ஓவியப் போட்டி, கல்லூரி மாணவா்களுக்கு குறள் சாா்ந்த கலை நிகழ்ச்சிகள், ஓவியம், படத்தொகுப்புப் போட்டி, ஒளிப்படப் போட்டிகள் ஆகியவை நடத்தப்பட்டன.

இதில், குறள் வினாடி வினாவில் 30 அரசுப் பணியாளா்கள் மற்றும் ஆசிரியா்கள், குறள் ஒப்பித்தல் மற்றும் குறள் சாா்ந்த ஓவியப் போட்டிகளில் பொதுமக்கள் தரப்பில் 18 போ், குறள் சாா்ந்த கலை நிகழ்ச்சிகள், ஓவியம், படத்தொகுப்புப் போட்டி, ஒளிப்படப்போட்டிகளில் 12 கல்லூரி மாணவா்கள் என மொத்தம் 60 போ் வெற்றி பெற்றனா்.

இவா்களுக்கு மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் புதன்கிழமை பரிசுகள், பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கிப் பாராட்டினாா்.

இந்நிகழ்ச்சியில் தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநா் கு. சந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.