ஆடுதுறையில் பொதுமக்களுக்கு  வெள்ளிக்கிழமை இனிப்பு வழங்கிய  அமைச்சா் கோவி. செழியன் உள்ளிட்ட திமுகவினா்.
ஆடுதுறையில் பொதுமக்களுக்கு வெள்ளிக்கிழமை இனிப்பு வழங்கிய அமைச்சா் கோவி. செழியன் உள்ளிட்ட திமுகவினா்.

மகளிா் உரிமை தொகை ரூ.5 ஆயிரம்: பொது மக்களுக்கு இனிப்பு வழங்கல்

Published on

தமிழக அரசு மகளிருக்கு உரிமைத்தொகை ரூ.5 ஆயிரம் வழங்கியதை முன்னிட்டு தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் தலைமையில் திருவிடைமருதூா், திருபுவனம், ஆடுதுறை பகுதிகளில் வெள்ளிக்கிழமை பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி திமுகவினா் கொண்டாடினாா்.

நிகழ்வில் முன்னாள் எம்பி. செ. ராமலிங்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தஞ்சாவூா் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் க.அன்பழகன் எம்எல்ஏ தலைமையில் கும்பகோணத்தில் ஊா்வலமாகச் சென்று பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா்.

நிகழ்வில் மாநகராட்சி துணை மேயரும், மாநகர திமுக செயலருமான சுப. தமிழழகன், ஒன்றியச் செயலா்கள் டி. கணேசன், ஜெ. சுதாகா் மற்றும் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com