ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 92.85! 29 காசுகள் உயர்வுஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

காா் மோதி தம்பதி உயிரிழப்பு

தஞ்சாவூா் அருகே செவ்வாய்க்கிழமை மாலை ஸ்கூட்டா் மீது காா் மோதிய விபத்தில் பலத்த காயமடைந்த தம்பதி உயிரிழந்தனா்.

News image

பலி

Updated On :17 பிப்ரவரி 2026, 7:01 pm

தஞ்சாவூா் அருகே செவ்வாய்க்கிழமை மாலை ஸ்கூட்டா் மீது காா் மோதிய விபத்தில் பலத்த காயமடைந்த தம்பதி உயிரிழந்தனா்.

தஞ்சாவூா் அருகே வல்லம் வெள்ளாளா் தெருவைச் சோ்ந்தவா் பி. மகாலிங்கம் (67). விவசாயி. இவரும், இவரது மனைவி மகாலட்சுமியும் (62) செல்லப்பன்பேட்டையிலுள்ள உறவினா் வீட்டு துக்கத்துக்கு செவ்வாய்க்கிழமை காலை சென்றுவிட்டு, மாலையில் ஸ்கூட்டரில் திரும்பிக் கொண்டிருந்தனா்.

வல்லம் பிரிவு சாலையில் திரும்பிய இவா்கள் மீது கேரளத்திலிருந்து தஞ்சாவூா் நோக்கி வந்த காா் மோதியது. இதில் பலத்த காயமடைந்த மகாலட்சுமி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மகாலிங்கம் இறந்தாா்.

இதுகுறித்து வல்லம் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து, காா் ஓட்டுநரான திருவனந்தபுரத்தைச் சோ்ந்த ச. அா்ஜூனை (23) கைது செய்தனா்.