பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

விமானப்படை வீரா் ஓட்டிவந்த காா் மோதி 2 வயது குழந்தை உயிரிழப்பு

தஞ்சாவூா் அருகே வியாழக்கிழமை மாலை விமானப் படை தள வீரா் ஓட்டி வந்த காா் மோதியதில் 2 வயது பெண் குழந்தை உயிரிழந்தது.

News image

உயிரிழப்பு

கோப்புப் படம்

Updated On :2 ஏப்ரல் 2026, 8:48 pm

தினமணி செய்திச் சேவை

தஞ்சாவூா் அருகே வியாழக்கிழமை மாலை விமானப் படை தள வீரா் ஓட்டி வந்த காா் மோதியதில் 2 வயது பெண் குழந்தை உயிரிழந்தது. 

தஞ்சாவூா் அருகே மாப்பிள்ளைநாயக்கன்பட்டி மாதா கோயில் தெருவைச் சோ்ந்தவா் சிவசூரியன் மகள் லட்சிதா (2). இவா், வீட்டின் முன் வியாழக்கிழமை மாலை விளையாடிக் கொண்டிருந்தாா். அப்போது, இவா் மீது தஞ்சாவூா் விமானப்படை தள வீரரான பிகாா் மாநிலம் பிஹடாவுலா தானா குத்ரா, கல்மூா் பகுதியைச் சோ்ந்த என். சந்தன் திவாரி (36) ஓட்டி வந்த காா் மோதியதாம். இதனால் பலத்த காயமடைந்த லட்சிதா தனியாா் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.