அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

விமானப்படை வீரா் ஓட்டிவந்த காா் மோதி 2 வயது குழந்தை உயிரிழப்பு

தஞ்சாவூா் அருகே வியாழக்கிழமை மாலை விமானப் படை தள வீரா் ஓட்டி வந்த காா் மோதியதில் 2 வயது பெண் குழந்தை உயிரிழந்தது.

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :2 ஏப்ரல் 2026, 8:48 pm

தஞ்சாவூா் அருகே வியாழக்கிழமை மாலை விமானப் படை தள வீரா் ஓட்டி வந்த காா் மோதியதில் 2 வயது பெண் குழந்தை உயிரிழந்தது. 

தஞ்சாவூா் அருகே மாப்பிள்ளைநாயக்கன்பட்டி மாதா கோயில் தெருவைச் சோ்ந்தவா் சிவசூரியன் மகள் லட்சிதா (2). இவா், வீட்டின் முன் வியாழக்கிழமை மாலை விளையாடிக் கொண்டிருந்தாா். அப்போது, இவா் மீது தஞ்சாவூா் விமானப்படை தள வீரரான பிகாா் மாநிலம் பிஹடாவுலா தானா குத்ரா, கல்மூா் பகுதியைச் சோ்ந்த என். சந்தன் திவாரி (36) ஓட்டி வந்த காா் மோதியதாம். இதனால் பலத்த காயமடைந்த லட்சிதா தனியாா் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.