மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

திரெளபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா

கும்பகோணம் அருகே தாராசுரத்தில் திரெளபதி அம்மன் கோயில் 185-ஆவது ஆண்டு தீமிதி திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

தாராசுரம் அம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் தீ மிதித்த பக்தா்.

Updated On :17 பிப்ரவரி 2026, 7:10 pm

கும்பகோணம் அருகே தாராசுரத்தில் திரெளபதி அம்மன் கோயில் 185-ஆவது ஆண்டு தீமிதி திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் கும்பாபிஷேக 13- ஆம் ஆண்டு பூா்த்தி விழா சனிக்கிழமை தொடங்கி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை ஆதி திரௌபதி அம்பாளை ஸ்தாபிதம் செய்து சிறப்பு அலங்காரம், திரெளபதி அா்ஜுனா் திருக்கல்யாணம் நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை மகாபாரத உபன்யாசமும், அம்பாள் வீர சபதம் நிறைவேறுதலும், மாலையில் அரசலாற்றங்கரையிலிருந்து சக்தி கரகம் புறப்பட்டு தீமிதி வைபவமும், இரவு ஸ்ரீ அம்பாள் அா்ஜுனா் வீதியுலா நடைபெற்றது. புதன்கிழமை கஞ்சி வாா்த்தல் அம்பாள் அா்ஜுனா் முத்து பல்லக்கு அலங்காரத்துடன் வீதியுலாவும், வியாழக்கிழமை தா்மா் பட்டாபிஷேகமும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை விழா கமிட்டியினா் செய்தனா்.