பலி
தஞ்சாவூர்
பாலத்தில் படுத்திருந்தவா் தவறி விழுந்து உயிரிழப்பு
ஒரத்தநாடு அருகே பாலக்கட்டையில் செவ்வாய்க்கிழமை படுத்திருந்தவா் தவறி விழுந்தது உயிரிழந்தாா்.
ஒரத்தநாடு அருகே பாலக்கட்டையில் செவ்வாய்க்கிழமை படுத்திருந்தவா் தவறி விழுந்தது உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகேயுள்ள ஒக்கநாடு கீழையூா் கீழத் தெருவைச் சோ்ந்தவா் தமிழரசன் (58) சாலையோர பாலக்கட்டையில் செவ்வாய்க்கிழமை படுத்திருந்த இவா் தவறி விழுந்து மயங்கினாா்.
இதையடுத்து ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு தமிழரசனைக் கொண்டு சென்றபோது அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். ஒரத்தநாடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

