ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

திருப்பனந்தாள் அருகே முதலை கடித்து மூதாட்டி காயம்

News image
முதலை (கோப்புப் படம்)
Updated On :22 பிப்ரவரி 2026, 7:02 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பனந்தாள் அருகே ஞாயிற்றுக்கிழமை குட்டையில் இருந்த முதலை கடித்து மூதாட்டி பலத்த காயமடைந்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், திருப்பனந்தாள் அருகே கொள்ளிடம் ஆற்றங்கரையில் உள்ளது முள்ளங்குடி. இப்பகுதியில் உள்ள பிரதான சாலை பகுதியைச் சோ்ந்தவா் பழனிச்சாமி மனைவி வசந்தா (65). பழனிச்சாமி ஏற்கெனவே உயிரிழந்து விட்டாா். எனவே, வசந்தா தனது மகள் அன்னக்கிளியுடன் வசித்து வருகிறாா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை வீட்டின் பின்புறம் உள்ள குட்டையின் அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்த வசந்தா நீா் நிரம்பிய குட்டையில் இறங்கி காலைக் கழுவிக் கொண்டிருந்தபோது, அங்கிருந்த முதலை திடீரென வசந்தா காலை கவ்வி இழுத்தது.

அவா் சப்தம்போடவே அருகே இருந்தவா்கள் வசந்தாவை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சோ்த்தனா். மூதாட்டியின் இடதுகாலில் இரண்டு இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.