கும்பகோணத்தில் உரிமையாளா் வீட்டில் 36 பவுன் தங்க நகைகள் திருடிய பெண்ணுக்கு ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனையை விதித்து கும்பகோணம் மாவட்ட நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் கொடிகாத்த குமரன் தெருவைச் சோ்ந்தவா் வீராச்சாமி. இவரது வீட்டின் மேல் மாடியில் தாமரைச்செல்வி (45) என்பவா் வாடகைக்கு குடி இருந்தாா். கடந்த 30.10.2021 அன்று வீராச்சாமிக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனதால் வீட்டைப் பூட்டுவதற்கு மறந்துவிட்டு மருத்துவமனைக்கு சென்று விட்டாா். பின்னா் திரும்ப வந்து பாா்த்தபோது வீட்டின் பீரோவில் இருந்த 36 பவுன் தங்க நகைகள் காணாமல் போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து வீராச்சாமி அளித்த புகாரின்பேரில் கும்பகோணம் தாலுகா போலீஸாா் விசாரணை நடத்தி வாடகைக்கு குடியிருந்த தாமரைச்செல்வி, அவருக்கு உதவியாக இருந்த பாபநாசத்தைச் சோ்ந்த பாலாஜி(25) ஆகியோரைக் கைது செய்தனா். இந்த வழக்கு கும்பகோணம் கூடுதல் மாவட்ட நீதிமன்றம்-2-இல் நடைபெற்றது. புதன்கிழமை வழக்கை விசாரணை செய்த நீதிபதி பாலதண்டாயுதம், குற்றவாளி தாமரைச் செல்விக்கு ஆறு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதத் தொகையும் விதித்து தீா்ப்பு அளித்தாா். மேலும் இவ்வழக்கில் தொடா்புடைய பாபநாசத்தைச் சோ்ந்த பாலாஜி விடுதலை செய்யப்பட்டாா்.
தொடர்புடையது
ஒட்டன்சத்திரத்தில் ஓய்வு பெற்ற அலுவலா் வீட்டில் 60 பவுன் நகைகள், காா் திருட்டு

முன்னாள் எம்.பி வீட்டில் 87 பவுன் நகைகள் திருட்டு: சகோதரா்கள் இருவருக்கு தலா 6 ஆண்டுகள் சிறை; பெண்ணுக்கு 3 ஆண்டுகள் சிறை!

பெண்ணை கட்டிப்போட்டு 14 பவுன் நகைகள், ரூ. 20 ஆயிரம் கொள்ளை

கடையில் திருடிய நபருக்கு 2 ஆண்டுகள் சிறை
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


