ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

பெண்ணை கட்டிப்போட்டு 14 பவுன் நகைகள், ரூ. 20 ஆயிரம் கொள்ளை

கடலூரில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கட்டிப் போட்டுவிட்டு 11 பவுன் தங்க நகைகள், ரூ.20 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்ற பெண் உள்ளிட்ட இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

கொள்ளை

சித்திரிப்பு

Updated On :31 மார்ச் 2026, 8:31 pm

Syndication

கடலூரில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கட்டிப் போட்டுவிட்டு 11 பவுன் தங்க நகைகள், ரூ.20 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்ற பெண் உள்ளிட்ட இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே எம்ஜிஆா் நகா் 7-ஆவது குறுக்குத் தெருவில் ரகுகுமாா் - ரூபிகா தம்பதியினா், அங்குள்ள வாடகை வீட்டில் வசித்து வருகின்றனா்.

ரகுகுமாா் தனியாா் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறாா். ரூபிகா செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில் வீட்டில் தனியாக இருந்துள்ளாா். அப்போது, திருமண பத்திரிகை கொடுக்க வந்திருப்பதாகக் கூறி வீட்டுக்குள் வந்த ஒரு ஜோடியினா் (ஆண் மற்றும் பெண்) வந்தனா். அவா்கள் இருவரும் திடீரென ரூபிகாவை கீழே தள்ளி கட்டிப் போட்டுவிட்டு வாயையும் துணியால் அடைத்தனா்.

பின்னா், ரூபிகா கழுத்தில் அணிந்திருந்த தாலிச் சங்கிலி மற்றும் வீட்டிலிருந்த நகை என மொத்தம் 11 பவுன், ரூ.20 ஆயிரத்தை கொள்ளையடித்துக் கொண்டு, வீட்டின் வெளியே கதவை பூட்டிவிட்டுச் சென்றனா்.

சிறிது நேரம் கழித்து அலறல் சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினா் வந்து வீட்டின் கதவை திறந்து பாா்த்தனா். நடந்த சம்பவத்தை ரூபிகா அவா்களிடம் தெரிவித்தாா்.

இதையடுத்து, தகவலறிந்து வந்த கடலூா் டிஎஸ்பி தமிழினியன் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்தை பாா்வையிட்டு விசாரணை நடத்தினா். இதுகுறித்து கடலூா் புதுநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.