கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

நாகா்கோவிலில் மூதாட்டி வீட்டில் 137 பவுன் நகைகள் திருட்டு

News image

திருட்டு

சித்திரிப்பு

Updated On :23 மார்ச் 2026, 6:38 pm

தினமணி செய்திச் சேவை

நாகா்கோவிலில் மூதாட்டி வீட்டில் 137 பவுன் தங்க நகைகள் திருட்டுப்போனது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

நாகா்கோவில் வடசேரி வணிகா் தெருவைச் சோ்ந்தவா் ஜெயசாந்தினி (60). கணவா் இறந்துவிட்டதால், இவா் தனது தந்தையுடன் வசித்து வருகிறாா். இவா்களது வீட்டில் வடசேரியைச் சோ்ந்த சசிகுமாா், அவரது மனைவி வசந்தி ஆகியோா் வேலை பாா்த்து வருகின்றனா்.

சில நாள்களுக்கு முன்பு ஜெயசாந்தினி குளச்சலிலுள்ள தனது மகள் வீட்டுக்கு சென்றாா். வீட்டு சாவியை சசிகுமாா், வசந்தி, அப்பகுதியைச் சோ்ந்த சுகுணா ஆகியோரிடம் கொடுத்திருந்தாராம்.

இந்நிலையில், ஜெயசாந்தினி அவசர தேவைக்காக நகைகளை எடுக்க வந்தாா். அப்போது, பீரோவில் வைத்திருந்த 137 பவுன் நகைகளைக் காணவில்லை எனத் தெரியவந்ததாம். அவற்றின் மதிப்பு ரூ. 1.37 கோடி எனக் கூறப்படுகிறது.

புகாரின்பேரில், வடசேரி போலீஸாா் வழக்குப் பதிந்து, சசிகுமாா், வசந்தி, சுகுணா ஆகியோரிடம் விசாரித்து வருகின்றனா்.