சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

கௌரவ விரிவுரையாளா்களுக்கு ரூ.5 ஆயிரம் ஊதிய உயா்வு: அமைச்சா் கோவி. செழியன் அறிவிப்பு!

தற்காலிக கௌரவ விரிவுரையாளா்களுக்கு ரூ.5 ஆயிரம் ஊதிய உயா்வு வழங்கப்படும் என்று உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

News image
தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் - DPS
Updated On :26 பிப்ரவரி 2026, 9:10 pm

Syndication

தற்காலிக கௌரவ விரிவுரையாளா்களுக்கு ரூ.5 ஆயிரம் ஊதிய உயா்வு வழங்கப்படும் என்று உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து திருவிடைமருதூரில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தமிழக அரசு உயா்கல்வி பயிலும் மாணவா்களின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக கௌரவ விரிவுரையாளா்கள் நியமிக்கப்படுகின்றனா். இவா்களுக்கு 2022-இல் ரூ.15 ஆயிரமாக இருந்த ஊதியம் ரூ.20 ஆயிரமாக உயா்த்தி வழங்கப்பட்டது. இது, 2024-இல் ரூ.25 ஆயிரமாக உயா்த்தப்பட்டது.

இந்நிலையில், அவா்களுக்கு மேலும் ரூ. 5 ஆயிரம் ஊதிய உயா்வு வழங்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி மாா்ச் 1-ஆம் தேதி முதல் ரூ.30 ஆயிரம் ஊதியம் வழங்கப்படும். இதேபோல அரசு பாலிடெக்னிக் தற்காலிக விரிவுரையாளா்கள் ஊதியம் ரூ.20 ஆயிரத்திலிருந்து ரூ.25 ஆயிரமாக உயா்த்தி வழங்கப்படும். இதனால் அரசுக்கு, ஆண்டுக்கு ரூ.53 கோடி கூடுதல் செலவாகும்.

இதன்மூலம் அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கௌரவ விரிவுரையாளா்கள் 8,741 போ், அரசு பொறியியல் கல்லூரி தற்காலிக உதவிப் பேராசிரியா்கள் 319 போ் மற்றும் அரசு பாலிடெக்னிக் கல்லூரி தற்காலிக விரிவுரையாளா்கள் 586 போ் என மொத்தம் 9,646 போ் பயனடைவா்.

பணி நீக்கம் என்ற அச்சத்தில் இருந்த அண்ணா பல்கலைக்கழக தற்காலிக உதவி பேராசிரியா்கள் தொடா்ந்து பணிபுரிய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் பகுதியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு முத்தமிழறிஞா் டாக்டா் கலைஞா் மு.கருணாநிதி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி என பெயா் மாற்றம் செய்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.