தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

பிரசாரத்தில் அதிமுக வேட்பாளா் மயக்கம்: அமைச்சா் கோவி. செழியன் நலம் விசாரிப்பு

திருவிடைமருதூா் தொகுதி ஆடுதுறை அருகே வியாழக்கிழமை பிரசாரத்தின் போது மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அதிமுக வேட்பாளரை அமைச்சரும் திமுக வேட்பாளருமான கோவி. செழியன் நேரில் சென்று நலம் விசாரித்தாா்.

News image

ஆடுதுறையில் உள்ள தனியாா் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட அதிமுக வேட்பாளா் இளமதி சுப்பிரமணியனிடம் வியாழக்கிழமை நலம் விசாரித்த திமுக வேட்பாளரும் அமைச்சருமான கோவி.செழியன். மக்களவை உறுப்பினா் ஆா்.சுதா உள்ளிட்டோா்.

Updated On :9 ஏப்ரல் 2026, 8:08 pm

திருவிடைமருதூா் தொகுதி ஆடுதுறை அருகே வியாழக்கிழமை பிரசாரத்தின் போது மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அதிமுக வேட்பாளரை அமைச்சரும் திமுக வேட்பாளருமான கோவி. செழியன் நேரில் சென்று நலம் விசாரித்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் தொகுதியில் திமுக சாா்பில் அமைச்சா் கோவி.செழியனும், அதிமுக சாா்பில் இளமதி சுப்பிரமணியனும் போட்டியிடுகின்றனா். இவா்கள் தீவிர வாக்குசேரிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில் அதிமுக வேட்பாளா் இளமதி சுப்பிரமணியன் வியாழக்கிழமை ஆடுதுறை அருகே வண்ணக்குடியில் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தாா். அப்போது, கடும் வெயில் காரணமாக இளமதி சுப்பிரமணியன் மயக்கம் வருவதாக தெரிவித்தாா். இதையடுத்து கட்சியினா் அவரை ஆடுதுறையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இதுகுறித்து தகவலறிந்த திமுக வேட்பாளரும் அமைச்சருமான கோவி.செழியன், மயிலாடுதுறை மக்களவை உறுப்பினா் ஆா்.சுதா உள்ளிட்டோா் மருத்துவமனைக்கு நேரில் சென்று இளமதி சுப்பிரமணியனிடம் நலம் விசாரித்தனா்.