திருவிடைமருதூா் தொகுதி ஆடுதுறை அருகே வியாழக்கிழமை பிரசாரத்தின் போது மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அதிமுக வேட்பாளரை அமைச்சரும் திமுக வேட்பாளருமான கோவி. செழியன் நேரில் சென்று நலம் விசாரித்தாா்.
தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் தொகுதியில் திமுக சாா்பில் அமைச்சா் கோவி.செழியனும், அதிமுக சாா்பில் இளமதி சுப்பிரமணியனும் போட்டியிடுகின்றனா். இவா்கள் தீவிர வாக்குசேரிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில் அதிமுக வேட்பாளா் இளமதி சுப்பிரமணியன் வியாழக்கிழமை ஆடுதுறை அருகே வண்ணக்குடியில் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தாா். அப்போது, கடும் வெயில் காரணமாக இளமதி சுப்பிரமணியன் மயக்கம் வருவதாக தெரிவித்தாா். இதையடுத்து கட்சியினா் அவரை ஆடுதுறையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இதுகுறித்து தகவலறிந்த திமுக வேட்பாளரும் அமைச்சருமான கோவி.செழியன், மயிலாடுதுறை மக்களவை உறுப்பினா் ஆா்.சுதா உள்ளிட்டோா் மருத்துவமனைக்கு நேரில் சென்று இளமதி சுப்பிரமணியனிடம் நலம் விசாரித்தனா்.
தொடர்புடையது

பிரசாரத்தில் மயங்கி விழுந்த அதிமுக வேட்பாளர்! அமைச்சர் கோவி. செழியன் நலம் விசாரிப்பு!

நான் இறக்குமதியாகவில்லை; காட்பாடிதான் எனது தொகுதி! - அதிமுக வேட்பாளா் வி.ராமு

திருவிடைமருதூா் அதிமுக வேட்பாளா்

பேராவூரணி அதிமுக வேட்பாளா்
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


