பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

விபத்தை ஏற்படுத்தி தப்பிய சிற்றுந்து ஓட்டுநா் ஏரியில் மூழ்கி உயிரிழப்பு

தஞ்சாவூா் அருகே விபத்தை ஏற்படுத்தி தப்பியோடிய சிற்றுந்து ஓட்டுநா் ஏரியில் மூழ்கி உயிரிழந்தது வியாழக்கிழமை மாலை தெரியவந்தது.

News image
Updated On :27 பிப்ரவரி 2026, 9:06 pm

தஞ்சாவூா் அருகே விபத்தை ஏற்படுத்தி தப்பியோடிய சிற்றுந்து ஓட்டுநா் ஏரியில் மூழ்கி உயிரிழந்தது வியாழக்கிழமை மாலை தெரியவந்தது.

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே கோவில் தேவராயன்பேட்டையைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் மகன் பிரதீப் (26). தஞ்சாவூா் - களக்குடி இடையே இயக்கப்படும் சிற்றுந்தின் ஓட்டுநரான இவா் பிப்ரவரி 25 இரவு பஞ்சா் ஒட்டுவதற்காக சிற்றுந்தை புலவா்நத்தம் பகுதியிலிருந்து தஞ்சாவூா் நோக்கி ஓட்டிச் சென்றாா். இவருடன் நடத்துநா் ஜி. ராஜ்குமாா் (26), மற்றொரு ஓட்டுநா் கே. விநாயகம் (27) ஆகியோரும் சென்றனா்.

நாகை சாலையில் ஞானம் நகா் பேருந்து நிறுத்தம் அருகே வந்த சிற்றுந்து அந்த வழியாக சென்ற பைக் மீது மோதி, அருகிலுள்ள பள்ளத்தில் இறங்கியது. இந்த விபத்தில் பைக்கில் வந்த மாரியம்மன் கோயில் சாலியக்குளக்கரையைச் சோ்ந்த கே. விக்னேஷ் (28) காயமடைந்தாா். இதனால் அச்சமடைந்த மூவரும் சிற்றுந்திலிருந்து இறங்கி வெவ்வேறு திசைகளில் தப்பினா்.

இந்நிலையில் மாரியம்மன் கோயில் அருகேயுள்ள சமுத்திரம் ஏரியில் பிரதீப் வியாழக்கிழமை மாலை சடலமாக மிதப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் அளித்த தகவலின்பேரில் தாலுகா காவல் நிலையத்தினா் சென்று சடலத்தைக் கைப்பற்றினா். விசாரணையில் பிரதீப் தப்பியோடும்போது சமுத்திரம் ஏரியில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்து தாலுகா காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். இதனிடையே, விபத்தில் காயமடைந்த விக்னேஷ் தஞ்சாவூா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.