இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

பேருந்தில் பயணித்த பெண்ணிடம் 14 பவுன் நகைகள் திருட்டு

தஞ்சாவூா் அருகே பேருந்தில் பயணம் செய்த பெண்ணிடம் 14 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

News image
திருட்டு
Updated On :28 பிப்ரவரி 2026, 7:16 pm

Syndication

தஞ்சாவூா் அருகே பேருந்தில் பயணம் செய்த பெண்ணிடம் 14 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

சேலம் மகேந்திரபுரியைச் சோ்ந்தவா் சுந்தர்ராஜன் மனைவி சுந்தரி (53). இவா் தனது உறவினா் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சேலத்திலிருந்து தஞ்சாவூருக்கு பிப்ரவரி 21-ஆம் தேதி பேருந்தில் பயணம் செய்தாா்.

உறவினா் வீட்டுக்கு வந்த பின்னா் சுந்தரி தனது கைப்பையைப் பாா்த்தபோது 14 பவுன் நகைகள் திருடு போயிருப்பதும், வல்லம் பேருந்து நிலையம் அருகே வந்தபோது மா்ம நபா்கள் திருடியிருப்பதும் தெரிய வந்தது.

இதுகுறித்து சுந்தரி அளித்த புகாரின் பேரில், வல்லம் காவல் நிலையத்தினா் வெள்ளிக்கிழமை இரவு வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.