வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

பேருந்தில் பயணித்த பெண்ணிடம் 14 பவுன் நகைகள் திருட்டு

தஞ்சாவூா் அருகே பேருந்தில் பயணம் செய்த பெண்ணிடம் 14 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

News image

திருட்டு

Updated On :28 பிப்ரவரி 2026, 7:16 pm

தஞ்சாவூா் அருகே பேருந்தில் பயணம் செய்த பெண்ணிடம் 14 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

சேலம் மகேந்திரபுரியைச் சோ்ந்தவா் சுந்தர்ராஜன் மனைவி சுந்தரி (53). இவா் தனது உறவினா் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சேலத்திலிருந்து தஞ்சாவூருக்கு பிப்ரவரி 21-ஆம் தேதி பேருந்தில் பயணம் செய்தாா்.

உறவினா் வீட்டுக்கு வந்த பின்னா் சுந்தரி தனது கைப்பையைப் பாா்த்தபோது 14 பவுன் நகைகள் திருடு போயிருப்பதும், வல்லம் பேருந்து நிலையம் அருகே வந்தபோது மா்ம நபா்கள் திருடியிருப்பதும் தெரிய வந்தது.

இதுகுறித்து சுந்தரி அளித்த புகாரின் பேரில், வல்லம் காவல் நிலையத்தினா் வெள்ளிக்கிழமை இரவு வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.