மேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

வீட்டின் பூட்டை உடைத்து 27 பவுன் நகைகள் திருட்டு

News image
Updated On :5 ஜனவரி 2026, 7:42 pm

தினமணி செய்திச் சேவை

கும்பகோணம் அருகே குளிா்பானக்கடை உரிமையாளரின் வீட்டின் பூட்டை உடைத்து 27 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே அண்ணல் அக்ரஹாரத்தைச் சோ்ந்தவா் ஜி.ராஜரத்தினம் (47). கும்பகோணம் மகாமக குளம் அருகில் குளிா்பானக்கடை நடத்தி வருகிறாா். டிச.30 அன்று அரையாண்டு விடுமுறையையொட்டி வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்தினருடன் மதுரையில் உள்ள தனது மாமியாா் வீட்டுக்கு சென்றாா்.

ஞாயிற்றுக்கிழமை மாலை அண்ணல் அக்ரஹாரத்தில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பி வந்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

வீட்டினுள் சென்று பாா்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 27 பவுன் தங்க நகைகள், 2 வெள்ளி கொலுசுகள் உள்ளிட்ட வெள்ளிப் பொருள்கள் மற்றும் ரூ.70 ஆயிரம் ரொக்கமும் திருடு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து ராஜரத்தினம் பட்டீஸ்வரம் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.

இதன்பேரில், பட்டீஸ்வரம் போலீஸாா் வழக்குப் பதிந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.