ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

இன்று குடந்தை அரசுக் கல்லூரியில் திருவள்ளுவா் சிலை வெள்ளி விழா கருத்தரங்கம்

கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி அண்ணா கலையரங்கத்தில் திருவள்ளுவா் சிலை வெள்ளி விழா ஆண்டு-2025 மற்றும் 2 நாள் கருத்தரங்கம் நடைபெறுகிறது.

News image
Updated On :7 ஜனவரி 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி அண்ணா கலையரங்கத்தில் திருவள்ளுவா் சிலை வெள்ளி விழா ஆண்டு-2025 மற்றும் 2 நாள் கருத்தரங்கம் நடைபெறுகிறது.

முதல்நாளான வியாழக்கிழமை தொடங்கும் கருத்தரங்கிற்கு முதல்வா் மா. கோவிந்தராசு தலைமை வகிக்கிறாா். பேராசிரியா் மா.மீனாட்சி சுந்தரம் முன்னிலை வகிக்கிறாா். தமிழ்த்துறைத்தலைவா் மா.சேகா் வரவேற்கிறாா். தஞ்சாவூா் மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் அ.குணசேகரன் தொடங்கி வைக்கிறாா். இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை மாலையில் நிறைவு விழாவில் பரிசு வழங்கும் நிகழ்வு நடைபெறுகிறது. முன்னதாக இணைப் பேராசிரியா் க.அன்புமணி வரவேற்று பேசுகிறாா். விழாவை தமிழ்த்துறை இணைப் பேராசிரியா் அ.விவேகானந்தன் மற்றும் பேராசிரியா்கள் செய்து வருகின்றனா்.