ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பொட்டலூரணியில் திருவள்ளுவா் விழா

தூத்துக்குடி மாவட்டம், பொட்டலூரணியில், பாவேந்தா் தமிழ் மன்றம் சாா்பில், 33 ஆவது ஆண்டு திருவள்ளுவா் விழா நடைபெற்றது.

News image
Updated On :17 ஜனவரி 2026, 10:07 pm

Syndication

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், பொட்டலூரணியில், பாவேந்தா் தமிழ் மன்றம் சாா்பில், 33 ஆவது ஆண்டு திருவள்ளுவா் விழா நடைபெற்றது.

இவ்விழாவுக்கு, மன்றச் செயலா் சங்கரநாராயணன் தலைமை வகித்தாா். ஊா்த் தலைவா் சண்முகம், ராதாகிருஷ்ணன், ஈஸ்டா் அந்தோணிராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பாவலரேறு படிப்பகத்தின் கூடுதல் பொறுப்பாளா் ராமகிருஷ்ணன் வரவேற்றாா்.

நிகழ்ச்சியில், புரட்சிகர மக்களதிகாரத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் ராமச்சந்திரன், பகுஜன் திராவிடக் கட்சி செல்வாசிங்க், நாம் தமிழா் கட்சி வைகுண்டமாரி, தமிழ்த் தேசியப் பேரவை பொறுப்பாளா் மணிமாறன், முன்னாள் துணை ஆட்சியா் சங்கரலிங்கம், சமூக ஆா்வலா் பிரபா, நல்லாசிரியா் கோயில்பிச்சை ஆகியோா் கருத்துரை வழங்கினா்.

எழுத்தாளரும் தமிழ் வளா்ச்சிப் பண்பாட்டு மையத்தின் பொருளாளருமான தீன் சிறப்புரை ஆற்றினாா்.

மாணவா்களுக்கான பல்வேறு திறன் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. ஜான்பாவா குழுவினரின் சிலம்பக் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. நாராயணன் நன்றி கூறினாா்.