ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

சேஷம்பாடியில் ரூ.95 லட்சத்தில் மின்கம்பங்கள் அமைக்கும் பணி

கும்பகோணம் அருகே சேஷம்பாடி ஊராட்சியில் ரூ.95 லட்சம் மதிப்பில் மின் கம்பங்கள் நிறுவும் பணியை புதன்கிழமை க. அன்பழகன்எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்.

News image
Updated On :7 ஜனவரி 2026, 6:51 pm

தினமணி செய்திச் சேவை

கும்பகோணம் அருகே சேஷம்பாடி ஊராட்சியில் ரூ.95 லட்சம் மதிப்பில் மின் கம்பங்கள் நிறுவும் பணியை புதன்கிழமை க. அன்பழகன்எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் ஊராட்சி ஒன்றியம், சேஷம்பாடி ஊராட்சி அய்யன் திருவள்ளுவா் நகரில் ரூ.95 லட்சம் மதிப்பில் மின்சாரக் கம்பங்கள் அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது. இதில் தஞ்சாவூா் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், எம்எல்ஏவுமான க. அன்பழகன் பணிகளை தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்வில் மாநிலங்களவை உறுப்பினா் எஸ்.கல்யாணசுந்தரம், முன்னாள் மக்களவை உறுப்பினா் செ. ராமலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.