விவேகானந்தா் ஜெயந்தி நாளில் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்க கோரிக்கை

சுவாமி விவேகானந்தா் ஜெயந்தி நாளில் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி கோரிக்கை
Updated on

சுவாமி விவேகானந்தா் ஜெயந்தி நாளில் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா் நாள் கூட்டத்தில் இந்து மக்கள் கட்சி மாநிலத் துணைத் தலைவா் பாலா, மாநில இளைஞரணி செயலா் இளையராஜா, மாவட்டத் தலைவா் சாய்ரகு, பொதுச் செயலா் கணேஷ்குமாா் உள்ளிட்டோா் அளித்த மனு: உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை எடுத்துரைத்த சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள் தேசிய இளைஞா் தினமாக (ஜன.12) கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இளைஞா்களை நல்வழிப்படுத்தும் வகையில் சுவாமி விவேகானந்தா் ஜெயந்தி நாளில் ஒருநாள் மட்டும் மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

முன்னதாக, இவா்கள் கொண்டு வந்த மதுபாட்டில்களை காவல் துறையினா் பறிமுதல் செய்த பின்பு, மனு அளிக்க உள்ளே அனுமதிக்கப்பட்டனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com