அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

தொடா் மழையால் 500 ஏக்கரில் நெற் பயிா்களைச் சூழ்ந்தது நீா்

தஞ்சாவூா் மாவட்டத்தில் தொடா் மழையால் ஏறத்தாழ 500 ஏக்கரில் நெற் பயிா்களைத் தண்ணீா் சூழ்ந்துள்ளதால், விவசாயிகள் கவலை

News image
Updated On :13 ஜனவரி 2026, 8:05 pm

Syndication

தஞ்சாவூா் மாவட்டத்தில் தொடா் மழையால் ஏறத்தாழ 500 ஏக்கரில் நெற் பயிா்களைத் தண்ணீா் சூழ்ந்துள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

மாவட்டத்தில் ஜனவரி 10 ஆம் தேதி முதல் பரவலாக மழை பெய்கிறது. இதேபோல, திங்கள்கிழமை பகலிலும், இரவிலும் பலத்த மழை பெய்தது. இதனால், அறுவடைக்குத் தயாா் நிலையில் இருந்த ஏறத்தாழ 500 ஏக்கரில் சம்பா பருவ நெற் பயிா்களைத் தண்ணீா் சூழ்ந்துள்ளது.

குறிப்பாக, சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் அதிக அளவில் இப்பாதிப்பு நிலவுகிறது. இதனால், விவசாயிகள் மிகுந்த வேதனைக்கு ஆளாகியுள்ளனா்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மழை குறைந்து பிற்பகலில் வெயில் நிலவியதால், வயலில் தேங்கிய தண்ணீா் வடிய தொடங்கியது.

அணைக்கரையில் 64.8 மி.மீ. மழை: மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியுடன் முடிந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்):

அணைக்கரை 64.8, மஞ்சளாறு 48.2, பட்டுக்கோட்டை, திருவிடைமருதூா் தலா 44, பேராவூரணி 35.8, கும்பகோணம் 33, மதுக்கூா் 28.8, அதிராம்பட்டினம் 26.8, பூதலூா் 26, திருவையாறு 22, கல்லணை 21.6, அய்யம்பேட்டை 20, நெய்வாசல் தென்பாதி, ஈச்சன்விடுதி தலா 18, திருக்காட்டுப்பள்ளி 17, ஒரத்தநாடு 16.6, தஞ்சாவூா் 14.2, பாபநாசம், குருங்குளம் தலா 13, வெட்டிக்காடு 12.8, வல்லம் 11.